மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா தலைமை தாங்கினார். அலுவலகத்தை மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ரிப்பன் வெட்டிதிறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, கார்த்திகேயன் ஆகியோருக்கு கட்சி நிர்வாகிகள்மாலை சால்வைகள் அணிவித்து மரியாதை செய்து வீரவாள் வழங்கினர்.
இதில் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளார் விஷால் கிருஷ்ணன்,வழக்கறிஞர்கள் அழகேசன், தியாகராஜன் நகரசெயலாளர் பசு மணியன், ஒன்றிய செயலாளர் தமிழன் தாமு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



