திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் மற்றும் நேர்த்திக்கடனாக பல ஆயிரகணக்கான பக்தர்கள் நேர்திக் கடனாக பால்குடம் எடுத்து வந்தனர்.

பக்தர்கள் எடுத்து வந்த பால் குடத்தில் இருந்துவிசாக கொரடு மண்டபத்தில் வைக்கப்பட்ட சண்முகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது
கடவுளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பாலை முறையாக சேகரிக்காத கோவில் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் அபிஷேக பாலை கோவில் நிர்வாகம் சாக்கடையில் திறந்து விட்டது இதனால் பக்தர்கள் மன வேதனை அடைந்தனர்.

விரதம் இருந்து கொண்டுவரும் அபிஷேக பாலை கோவில் நிர்வாகம் முறையாக பக்தர்களுக்கு வழங்காமல் சாக்கடையில் கலந்து விடுவது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.



