உங்களால் நாக்கால் மின்விசிறியை நிறுத்த முடியுமா? 24 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து வைத்திருக்க முடியுமா? முடியாததை முடித்துக் காட்டி சாதித்த சாதனையாளர்கள் நம்மை மலைக்க வைக்கின்றனர்.
26 வயதான இந்திய பாடிபில்டர் பிரதீக் விட்டல் மாற்றுத் திறனாளி. அவர் உடலால் சிறியவராக இருந்தாலும், சாதிப்பதில் பெரியவராக இருக்கிறார். அவர் தனது குறைபாட்டை பலமாக மாற்றி, உலகின் மிகச்சிறிய பாடிபில்டர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளா. 3 அடி 4 அங்குலம் உயரமே உள்ள பிரதீக், தற்போது உலக சாதனையாளர். பாடி பில்டிங்கை தனது தொழிலாகவும் மாற்றிக் கொண்ட இந்த சாதனை மனிதர், தனது வாழ்நாள் கனவை நிறைவேற்றிவிட்டார்.
இதோபோல் குரோஷியாவைச் சேர்ந்த 56 வயது நபர் வித்தியாசமான உலக சாதனை படைத்துள்ளார். புத்மிர் சோபத் என்பவர், தண்ணீருக்கு அடியில் அதிக நேரம் மூச்சைப் பிடித்து இருந்து, உலக சாதனை படைத்துள்ளார். இந்த நபர் நீருக்கடியில் 24 நிமிடம் 37 வினாடிகள் மூச்சை பிடித்தவாறு இருந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு தான் செய்த சாதனையையே அவர் முறியடித்துள்ளார்
ஜோ எல்லிஸ் என்ற பெண் வித்தியாசமான சாதனையை செய்து உலக சாதனை படைத்துள்ளார். நாக்கால் மின்விசிறியை நிறுத்தி உலக சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோ, மின் விசிறியின் பிளேட்டை தனது நாக்கால் நிறுத்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி, இந்த சாதனை படைத்துள்ளார்.
- தமிழ்நாட்டில் கிராமப்புற கபடி வீரர்களின் விளையாட்டு திறமை -இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் ராம்ஹார் சிங் பேட்டி
- ஆஹா நம்ம இராமேஸ்வரம் மா இது!
- வனத்தினுள் வான்உயர மரங்கள் பச்சை இலை குடைபிடிக்க கோடை விடுமுறை விழிப்புணர்வு முகாம்
- சுசீந்திரம் பேரூராட்சி குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து ம தி மு க மனு
- கோடிக்கணக்கில் பண மோசடி காவல்துறையினரிடம் புகார் மனு.
- திண்டுக்கல் சிறுமலையில் மழை..!
- பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதல் நான்கு இடம் பிடித்து சாதனை படைத்த பள்ளி மாணவர்கள்
- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் வனத்துறை-தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்
- குமரி லெமூர் கடலில் குளித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5பேர் உயிரிழந்தனர்
- நடிகை கரீனா கபூர் யூனிசெப் இந்தியாவின் தேசிய தூதராக நியமனம்