

நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதில் 27 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவு மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சென்னை ஐஐடி தொடங்கி நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் இதன்காரணமாக மாணவர்களின் தற்கொலை தொடர்கதையாகி வருவதாகவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.
உயர் கல்வி நிலையங்களில் சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் தற்கொலை விவரங்களை வழங்குமாறு மக்களவையில் நாமக்கல் தொகுதி எம்.பி சின்ராஜ் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையில் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐஐடி கல்வி நிறுவனங்களில் 34 மாணவர்கள் இன்னுயிரை மாய்த்துள்ளனர். இதில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 13 பேரும் பட்டியலின பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேரும் அடங்குவர் என்று கூறியுள்ளது.
மேலாண்மை கல்வி நிறுவனமான ஐஐஎம்மில் 5 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
NIT என்று அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்பக் நிறுவனத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 11 மாணவர்கள், பட்டியலின பிரிவைச் சேர்ந்த 6 மாணவர்கள் உள்பட 30 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் 37 மாணவர்கள் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
மாணவர்களிடம் பாகுபாட்டை குறைக்கும் வகையிலும் சக மாணவர்களால் ஏற்படும் பிரச்னைகளை தடுக்கும் வகையிலும் யூஜிசி மூலம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- முதல்முறையாக சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் நபர்களை கண்காணித்து, புகைப்பட பிரிண்டிங் செய்யும் ரேடார் கருவியை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் – எஸ்பி. ஹரி கிரண் பிரசாத்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முதல்முறையாக சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் நபர்களை … Read more
- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பொதுமக்கள் நன்கொடை செலுத்த க்யூ.ஆர்.கோடு வசதியை அறிமுகம் செய்த கோவில் நிர்வாகம்..,மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக … Read more
- மின்சாரத்தின் பிடியில் சிக்கிய குழந்தையை கண நேரத்தில் மீட்ட முதியவர்கள்..!
- கிரேட் இந்தியன் சர்க்கஸ் பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையையொட்டி பையர் டான்ஸ் உள்ளிட்ட புதிய சாகசங்கள்…மதுரையில் நடைபெற்று வரும் கிரேட் இந்தியன் சர்க்கஸ் பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையையொட்டி பையர் டான்ஸ் … Read more
- தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியல் மாற்றம் அடைந்திடுவோம், பொது பிரிவில் சேர்ந்திடுவோம் என, மள்ளர் சேனைதலைவர் சோலை பழனிவேல் ராசன் மதுரையில் பேட்டி…மதுரையில் மகபூப்பாளையம் பகுதியில்அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் மள்ளர்சேனைநிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் … Read more
- திமுக இளைஞரணி மாநாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட முன்வருவாரா..? சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..,
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…! அனைவரின் மனதிலும்… கஷ்டம், கஷ்டம், … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 259: யாங்குச் செய்வாம்கொல் தோழி! பொன் வீவேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,பெருங் … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 536:இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்பது இல். பொருள் (மு.வ): யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் … Read more
- அமைச்சர் உதயநிதியை பதவிநீக்கம் செய்யக் கோரி ஆளுநரிடம் மனு..!அமைச்சர் உதயநிதியைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் ஆளுநரிடம் மனு … Read more
- புதிய அதிமுக நிர்வாகிகள் நியமனம்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வாழ்த்து…விருதுநகர் மாவட்டத்தில் புதிய அதிமுக நிர்வாகிகள் நியமனம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வாழ்த்து பெற்றனர்.சிவகாசி, செப். … Read more
- பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலைக்கு நாளை சிறப்பு ரயில்..!நாளை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, திருவண்ணமாலைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே … Read more
- வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நான்கு நாட்கள் சிறப்பு முகாம்..!தமிழகத்தில் நவம்பர் 4,5,18,19 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வாக்காளர் … Read more
- தொழில் நஷ்டத்தால் முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துடன் தற்கொலை..!மதுரை மாவட்டம், மதுரையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தொழில் நஷ்டம் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை … Read more
