தேனியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வளர்ச்சி குறைபாடு காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்பு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது சிறுமிக்கு பிறவி ரத்தநாள குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் சிடி ஸ்கேன் மூலம் சிறுமியை பரிசோதனை செய்ததில் அபெர்னெதி மால்ஃபார்மேஷன் (ABERNETHY MALFORMATION) என்கிற மிக அபூர்வ பாதிப்பு இருந்து கண்டறியப்பட்டது.

கல்லீரலுக்குச் சென்று சுத்திகரிக்கப்பட வேண்டிய ரத்தம் அசாதாரண இணைப்பு காரணமாக கல்லீரலை தவிர்த்து நேரடியாக இதயத்திற்கு செல்வதால் சிறுமிக்கு கல்லீரலுக்கு ரத்தம் செல்லாமலும், இதயத்திற்கு சுத்திகரிக்கப்படாத ரத்தம் செல்வதால் வாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு இதயம் மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது.
உலகில் இதுவரை 300 பேருக்கு மட்டும் இந்த அரியவகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, தமிழகத்தில் ஒரு சில மருத்துவமனைகளில் இந்த பாதிப்பு கண்டறிந்த போதிலும் தென் தமிழகத்தில் முதல் முறையாக இந்த அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட தேனியை சேர்ந்த சிறுமிக்கு மிக நுணுக்கமான அறுவை சிகிச்சை மூலம் ரத்த நாளங்களை தடுத்து சீராக ரத்தம் செல்லும் வகையில் வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொண்டு சிறுமியை காப்பாற்றி உள்ளதாக தெரிவித்தனர்
சிகிச்சை முடிந்து மூன்று நாட்களில் சிறுமி வீடு திரும்பி தற்போது நலமாக உள்ளதாக தெரிவித்தனர்.






