• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..,

ByM.S.karthik

Sep 24, 2025

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் எழுவணி ஊராட்சியில் நடைபெற்ற எழுவணி,ஆலாத்தூர், திருவளர்நல்லூர்,விகரிசல்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் ஊராட்சி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இதில் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுகி செல்வகுமார் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அம்பிகா ஊராட்சி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சம்பத், இலங்கை உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் நரிக்குடி சேர்மன் காளீஸ்வரி,சமயவேலு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.