விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையில் பணி ஓய்வு பெற்ற உதவி மேலாளருக்கு பொக்லைன் இயந்திரம் மூலமாக மலர் தூவி வாழ்த்திய சக ஊழியர்கள்….

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலையின் உதவி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற நரசிம்ம வர்மன் என்ற அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா சக ஊழியர்கள் மூலம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் மேளதாளம் முழங்க மாலை அணிவிக்கப்பட்டு ஆட்டம் பாட்டதுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பணி ஓய்வு பெறும் நரசிம்ம வர்மனுக்கு சக ஊழியர்கள் சார்பாக பொக்லைன் இயந்திர பக்கெட்டில் மலர்கள் தூவி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.