• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரபிக்கடலில் பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சி… கடல் எல்லையில் பதற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், இந்தியாவின் நடவடிக்கைக்கு பின்
அரபிக்கடலில் பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சி அறிவித்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததுடன், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் குடிமக்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான விசா வழங்குவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது முதிர்ச்சியற்ற செயல் என்று பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் கூறினார். இந்தியாவின் நடவடிக்கைகளுக்குப் பிறகு, பாகிஸ்தானில் இன்று தேசிய பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ள இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்களும், பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

அதே நேரத்தில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக டெல்லியில்
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு திரும்பியுள்ள ராகுல் காந்தியும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்.

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்காக காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று பாரமுல்லா மற்றும் குல்காம் பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரபிக்கடலில் பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சி அறிவித்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும், ஏவுகணை சோதனை நடத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இந்தியாவின் விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கடலுக்குள் நகர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.