• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ByM.JEEVANANTHAM

Mar 11, 2025

திமுக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது .

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வலியுறுத்தியும், கம்யூடேஷன் தொகை பிடித்தம் செய்வதை பத்து ஆண்டுகளாக குறைக்க வலியுறுத்தியும் நீதிமன்ற தீர்ப்பின்படி 80 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு 20% கூடுதல் தொகை வழங்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏராளமான ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.