பஞ்சாப்பில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலம், பெரோஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் ஜலாலாபாத் நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை வேனில் சென்றுகொண்டிருந்தனர்.அவர்களது வாகனம் பெரோஷ்பூர் -பாசில்கா நெடுஞ்சாலையில் கொல்காமவுர் கிராம் அருகே காலை 7.45 மணியளவில் வந்து கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் அப்பளம் போல நொறுங்கின. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்த தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.