பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T.மதியழகன் தலைமையிடம் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு மருத்துவ முகாமானது பெரம்பலூர் மாவட்டத்தில் பணி புரியும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் கண், காது, பல் மற்றும் மகப்பேறு ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமானது மாவட்ட ஆயுதப்படையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பணி புரியும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
மேலும் இந்த மருத்துவ முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T.மதியழகன் (தலைமையிடம்) மற்றும் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் S.சோமசுந்தரம் மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

- மதம் கடந்த நேசம்! மதுரை குடமுழுக்கு நெகிழச் செய்த இஸ்லாமியர்கள்..,
- கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு மீனவர்களின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி..,
- இலக்கியம்
- பொது அறிவு வினா விடைகள்
- திருக்குறள்



