புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை கைவிட கோரி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் ஆற்றங்கரையில் சில ஆண்டுகளுக்கு முன் 46 மணல் குவாரிகள் செயல்பட்டு, அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதால் தமிழகத்தில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்த மணல் குவாரிகளுக்கு எதிராக பா.ம.க. மேற்கொண்ட அரசியல் மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளின் பயனாக, தமிழகத்தில் மணல் குவாரிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு, இப்போது 7 மணல் குவாரிகள் மட்டும்தான் செயல்பட்டு வருகின்றன. மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இப்போதும் நடத்தி வருகிறார்.
அரசியல் ரீதியாகவும், சட்டப்படியும் போராடி மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கூடாது. அவ்வாறு திறப்பது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவித்து விடும். இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, மணல் இறக்குமதியையும், எம். சாண்ட் உற்பத்தியையும் அதிகரித்து கட்டுமானத்திற்கு தட்டுப்பாடின்றி மணல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
- பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை
- எலுமிச்சம்பழம் விலை கிலோ ரூ.100 விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி
- கோடை வெயிலை தணிக்க குதூகல குளியல்
- கல், மண் குவாரியை தடுத்து நிறுத்த, விவசாயிகள் கோரிக்கை
- மிஷ்கின் ஒரு டவுண்லோடு இயக்குநர்; பி.சி.அன்பழகன் குற்றச்சாட்டு
- கலசலிங்கம் விஷூவல் கம்யூனிகேஷன் மாணவர்களின் குறும்படங்கள் வெளியீட்டு விழா
- ஆண்டிபட்டி காவல் தெய்வமான முனியாண்டி சுவாமி கோவில் சித்திரை திருவிழா
- யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வரப்பட்ட போலீஸ் வாகனம் முன்பு பெண்கள் செருப்புடன் போராட்டம்
- தமிழக முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 21_வது ஆண்டு நினைவு தினம்
- உசிலம்பட்டி பகுதியில் மின்தடை