புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை கைவிட கோரி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் ஆற்றங்கரையில் சில ஆண்டுகளுக்கு முன் 46 மணல் குவாரிகள் செயல்பட்டு, அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதால் தமிழகத்தில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்த மணல் குவாரிகளுக்கு எதிராக பா.ம.க. மேற்கொண்ட அரசியல் மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளின் பயனாக, தமிழகத்தில் மணல் குவாரிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு, இப்போது 7 மணல் குவாரிகள் மட்டும்தான் செயல்பட்டு வருகின்றன. மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இப்போதும் நடத்தி வருகிறார்.
அரசியல் ரீதியாகவும், சட்டப்படியும் போராடி மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கூடாது. அவ்வாறு திறப்பது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவித்து விடும். இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, மணல் இறக்குமதியையும், எம். சாண்ட் உற்பத்தியையும் அதிகரித்து கட்டுமானத்திற்கு தட்டுப்பாடின்றி மணல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
- கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளியை தூக்கிலிட கோரிக்கை..,
- மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்..,
- துணை குடியரசுத் தலைவரை அதிகாரிகள் வரவேற்பு..,
- ஆசிரியர்கள் பற்றாக்குறை போக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..,
- பரமாச்சாரியா சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர திருவிழா..,
- குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த அகவை 70_ம் விழா..,
- 25 கிலோ நெகிழிப் பொருட்கள் பறிமுதல்..,
- விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் ஆய்வு..,
- கழனிவாசல் கிராமத்தில் சிபிஎம் காத்திருப்பு போராட்டம் வெற்றி…
- ஹோமியோபதி கல்லூரி கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை ரத்து..,













; ?>)
; ?>)
; ?>)