புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை கைவிட கோரி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் ஆற்றங்கரையில் சில ஆண்டுகளுக்கு முன் 46 மணல் குவாரிகள் செயல்பட்டு, அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதால் தமிழகத்தில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்த மணல் குவாரிகளுக்கு எதிராக பா.ம.க. மேற்கொண்ட அரசியல் மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளின் பயனாக, தமிழகத்தில் மணல் குவாரிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு, இப்போது 7 மணல் குவாரிகள் மட்டும்தான் செயல்பட்டு வருகின்றன. மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இப்போதும் நடத்தி வருகிறார்.
அரசியல் ரீதியாகவும், சட்டப்படியும் போராடி மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கூடாது. அவ்வாறு திறப்பது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவித்து விடும். இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, மணல் இறக்குமதியையும், எம். சாண்ட் உற்பத்தியையும் அதிகரித்து கட்டுமானத்திற்கு தட்டுப்பாடின்றி மணல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
- அதிமுகவை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள், பிள்ளை பிடிக்கும் வேலையை இத்தோடு விட்டுவிட வேண்டும் – ஆர்.பி.உதயக்குமார் தாக்கு.,
- மாணவர் அமுதன் உயிரிழப்பு விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்..,
- கோவையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு…
- மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு..,
- பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
- புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா..,
- ஏழாயிரம் பண்ணையில் ஆசிரியர் ஜேசுராஜா நினைவாக மினி மாரத்தான் போட்டி..,
- கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி..,
- தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா…





