• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பேருந்துகள் நிற்காமல் செல்வதைக் கண்டித்து.., மாணவ மாணவிகள் போராட்டம்..!

Byவிஷா

Mar 9, 2023

மதுரை மாவட்டத்தில் உள்ள எழுமலை கிராமத்தில், பள்ளி நேரங்களில் பேருந்துகள் நிற்காமல் செல்வதால், மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம் எழுமலையில் உள்ள பள்ளிகளுக்கு எம். கல்லுப்பட்டி பகுதியில் இருந்து மாணவர்கள் வருகின்றனர். காலை 8: 30 மணி முதல் 9 மணி வரை வரும் பேருந்துகள் கிராமங்களில் நிற்காமல் செல்வதை கண்டித்து நேற்று காலை 8 45 மணிக்கு அய்யம்பட்டி பகுதியில் இருந்து வந்த டவுன் பஸ்சை சூலபுரத்தில் மறித்து மாணவர்களும் பெற்றோர்களும் 45 நிமிடம் போராட்டம் நடத்தினர். எழுமலை எம். கல்லுப்பட்டி ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. எஸ்ஐ மகாலிங்கம் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர்.