• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: October 2023

  • Home
  • மீண்டும் ரூ.44ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..!

மீண்டும் ரூ.44ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..!

தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த 23ம் தேதி முதல் தொடர்ச்சியாக 11 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1888 வரை குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது..…

இஸ்ரேலில் இருந்து 2ம் கட்டமாக 235 இந்தியர்கள் தமிழகம் வருகை..!

இஸ்ரேலில் இருந்து 2ம் கட்டமாக 235 இந்தியர்கள் விமானம் மூலமாக தமிழகம் வந்தடைந்துள்ளனர்.இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேலில் பல இந்தியர்கள் இந்த போரால் சிக்கிக்கொண்டனர். மத்திய அரசு அவர்களை மீட்க…

வீட்டுப்பாடம் எழுதாத மாணவியின் கையை முறித்த ஆசிரியை..!

அரசு பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக ஆசிரியை சரமாரியாக தாக்கியதில் எட்டாம் வகுப்பு மாணவியின் கை முறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஆற்றுப்பாதை தெருவில் வசித்து வருபவர்கள் செந்தில் –…

மலைவாசஸ்தலங்களுக்குச் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்துக..,உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைவாச தலங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை முறைப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.டாஸ்மாக் கடைகளில், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும்…

சென்னிமலையில் இந்து முன்னணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

சென்னிமலையைப் பற்றி கிறிஸ்தவ போதகர் ஒருவர் தவறாகப் பேசியதைக் கண்டித்து, இந்து முன்னணி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.கடந்த மாதம் 17 ஆம் தேதி கிறித்துவ போதகர் ஒருவர் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் தனது குடும்பத்தினருடன்…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தற்போது தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாகத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய…

அக்.17ல் எடப்பாடி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்..!

வரும் அக்டோபர் 17ஆம் தேதி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்…

40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை – இலங்கை சொகுசு கப்பல் தொடக்கம்..!

40 ஆண்டுகளுக்குப் பிறகு, நாகைப்பட்டினம் – இலங்கைக்கு பயணிகள் சொகுசு கப்பலை காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் மத்திய துறைமுகம்…

இராஜபாளையம் அருகே மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் தேரோட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் தேர் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினசரி மாலையில் மாரியம்மன் ரிஷப, சிம்மவாகனம், தண்டியல்,…

மருதன்கிணறு கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலூக்காவிலுள்ள மருதன்கிணறு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இக்கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, நெல் பூ மற்றும் பாசிப்பயிறு…