• Fri. Mar 29th, 2024

ஸ்ரீரங்கத்தில் பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது..

Byadmin

Jul 28, 2021

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் 44.93 லட்சம் ரொக்கம், 94 – கிராம் தங்கம், 817- கிராம் வெள்ளி காணிக்கை.

ஸ்ரீரங்கத்தில் பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது:

44.93 -லட்சம் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்:

108 திவ்ய தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்களால் காணிக்கை செலுத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் ஜூலை மாதம் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை கோவில் இணை ஆணையர் திரு . மாரிமுத்து முன்னிலையில் கருடாழ்வார் சன்னதியில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி இன்று காலை தொடங்கியது.

ஸ்ரீரங்கம் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை சுமார் 5 மணி நேரம் எண்ணப் பட்டது.

இதில் பக்தர்கள் ரொக்கமாக 44 லட்சத்து 93 ஆயிரத்து 020 ரூபாய் ரொக்கமும், 94 – கிராம் தங்கமும், 817 கிராம் வெள்ளியும், அயல்நாட்டு நோட்டுகள் 50 என காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *