• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

தீ விபத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு..,

ByK Kaliraj

Aug 22, 2025

சிவகாசி அம்மன் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கௌதம் 27. இவர் கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்தபோது வீட்டின் மேல்மாடி அறையில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் கௌதம் 80 சதவீத தீக்காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கௌதம் இன்று அதிகாலை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கௌதம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.