சீன அதிபராக மீண்டும் ஜி ஜின்பிங் தேர்தெடுக்கப்பட உள்ள நிலையில் அவருக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் உயர்மட்ட முக்கிய கூட்டம் கடந்த 16-ந் தேதி தலைநகர் பீஜிங்கில் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ஜின்பிங் 3-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கிடையே ஜின்பிங் மீண்டும் அதிபராவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் அதிபர் ஜின்பிங்குக்கு எதிர்ப்பு வலுக்கிறது. பீஜிங்கை போல் மற்ற நகரங்களிலும் மக்களின் போராட்டம் பரவியுள்ளது. பீஜிங் உள்பட 8 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பல பல்கலைக்கழக வளாகங்களில் சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடந்தது.