அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.ஸ்டாலின் சட்டபேரவையில் அறிவித்துள்ளார்.அதன்படி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் ,3 வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.