• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்டம் காந்தி சேவா சங்கம் மூலம் சாதனைப் பெண்கள் கௌரவிப்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்குகாந்தி சேவா சங்கம் என்ற அமைப்பின் மூலம் விருதுவழங்கி கெளரவிக்கப்பட்டது
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் மருத்துவத்துறை வங்கிகள் வார்டு உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்கள் ஆசிரியர்கள் பணியாளர்கள் தையல் தொழிலாளர்கள் என தனியாக சாதித்து வரும் மகளிர்களை கௌரவப்படுத்துகின்ற வகையில் மஞ்சூரில் சிறப்பாக செயல்பட்டு பல சமூக பணிகளை செய்து வரும் காந்தி சேவா சங்கம் என்ற அமைப்பின் மூலம் வருடம் தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றனர்.

காந்தி சேவா சங்க நிர்வாகிகள் போஜன் கேசவன் சங்கர் காந்தி ஆலன் வெங்கடசாமி குமார் புனிதா மது ஆகியோரின் தலைமையில் சாதனை பெண்கள் என்ற தலைப்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பல் மருத்துவர் ரித்து கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியபாணி வங்கி மேலாளர் புனிதா இன்கோ , மேலாண்மை இயக்குனர் அகிலா சேரனூர் வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி ஓம் சாந்தி முத்துமாரி தூய்மை பணியாளர்கள் மேரி மலர் கீதா புஷ்பா என அனைத்து மகளிர்களுக்கும் காந்தி சேவா சங்க கட்டிடத்தில் பொன்னாடை போர்த்தி பரிசுகள் வழங்கப்பட்டது கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது