• Fri. Apr 19th, 2024

எந்த முகத்தோடுஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டு கேட்பார் மு.க. ஸ்டாலி்ன்- கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி

Byதரணி

Jan 26, 2023

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பெண்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலி்ன் எந்த முகத்தோடு ஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டு கேட்பார் என்று சிவகாசியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பினார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைக்கிணங்க விருதுநகர் மே்ற்கு மாவட்ட மாணவரணி சார்பி்ல் சிவகாசியில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் சிவகாசி அருகே நாரணாபுரத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா காலத்திலிருந்து தற்போது தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் காலம்வரை தமிழுக்காக தமிழ் மொழிக்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் வருகின்றது. தமிழ் மொழி குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது. திமுகவில் தற்போதுள்ள தலைவர்களில் யாரும் மொழிப்போர் தியாகிகள் கிடையாது.
அதிமுக அரசின் அனைத்து மக்கள் நல திட்டங்களை எல்லாம் திமுக அரசு நிறுத்தி விட்டது .இப்போது தாலிக்கு தங்கம் கிடையாது, முதியோர் உதவி தொகை கிடையாது, பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கிடையாது, திருமண உதவித் தொகை கிடையாது இப்படி அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. திமுக வந்தவுடன் சொத்து வரியை கூட்டி விட்டனர். வீட்டு வரியை கூட்டி விட்டனர். .பஸ்ஸில் ஓசியாக செல்லும் பெண்களை எல்லாம் வசை பாடுகின்றனர். அரசு பஸ்ஸில் மகளிர் மரியாதை குறைவாக பஸ் கண்டக்டர் நடத்துவதாக பெண்கள் புகார்கள் புகார் கூறுகின்றனர். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பெண்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலி்ன் எந்த முகத்தோடு ஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டு கேட்பார்.


விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்று பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார்கள். தற்போது அந்த வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 2024 இல் ஒரே தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. எந்தத் தேர்தல் வந்தாலும் மக்கள் அண்ணா திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்.
சிவகாசிக்கு மானுர் கூட்டிக்கூடிநீர் திட்டத்தை அதிமுக ஆட்சியில் நான்தான் கொண்டு வந்தேன். சிவகாசியை மாநகராட்சியாக ஆக்கியது அதிமுக ஆட்சியில்தான். நான்தான் பரிந்துரை செய்தேன். சிவகாசி மாநகராட்சியாக அதிமுக அறிவித்தது. மாநகராட்சிக்கு மத்திய அரசின் நிதி அதிகமாக வரும் .அதற்கு அடிப்படை பிள்ளையார் சுழி போட்டு கொடுத்தது நான் தான். ஆசிய பணக்கார வரிசையில் உள்ள திமுக குடும்பத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டியது உங்களுடைய கடமை. அண்ணா திமுகவை ஆட்சி அமர்த்த வேண்டியது உங்களுடைய கடமை. உங்களுக்காக உழைப்பது எங்களின் உரிமை என்று பேசினார்.
முன்னதாக பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்படடிருந்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படங்களுக்குகழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *