கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பெண்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலி்ன் எந்த முகத்தோடு ஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டு கேட்பார் என்று சிவகாசியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பினார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைக்கிணங்க விருதுநகர் மே்ற்கு மாவட்ட மாணவரணி சார்பி்ல் சிவகாசியில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் சிவகாசி அருகே நாரணாபுரத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா காலத்திலிருந்து தற்போது தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் காலம்வரை தமிழுக்காக தமிழ் மொழிக்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் வருகின்றது. தமிழ் மொழி குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது. திமுகவில் தற்போதுள்ள தலைவர்களில் யாரும் மொழிப்போர் தியாகிகள் கிடையாது.
அதிமுக அரசின் அனைத்து மக்கள் நல திட்டங்களை எல்லாம் திமுக அரசு நிறுத்தி விட்டது .இப்போது தாலிக்கு தங்கம் கிடையாது, முதியோர் உதவி தொகை கிடையாது, பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கிடையாது, திருமண உதவித் தொகை கிடையாது இப்படி அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. திமுக வந்தவுடன் சொத்து வரியை கூட்டி விட்டனர். வீட்டு வரியை கூட்டி விட்டனர். .பஸ்ஸில் ஓசியாக செல்லும் பெண்களை எல்லாம் வசை பாடுகின்றனர். அரசு பஸ்ஸில் மகளிர் மரியாதை குறைவாக பஸ் கண்டக்டர் நடத்துவதாக பெண்கள் புகார்கள் புகார் கூறுகின்றனர். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பெண்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலி்ன் எந்த முகத்தோடு ஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டு கேட்பார்.



விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்று பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார்கள். தற்போது அந்த வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 2024 இல் ஒரே தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. எந்தத் தேர்தல் வந்தாலும் மக்கள் அண்ணா திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்.
சிவகாசிக்கு மானுர் கூட்டிக்கூடிநீர் திட்டத்தை அதிமுக ஆட்சியில் நான்தான் கொண்டு வந்தேன். சிவகாசியை மாநகராட்சியாக ஆக்கியது அதிமுக ஆட்சியில்தான். நான்தான் பரிந்துரை செய்தேன். சிவகாசி மாநகராட்சியாக அதிமுக அறிவித்தது. மாநகராட்சிக்கு மத்திய அரசின் நிதி அதிகமாக வரும் .அதற்கு அடிப்படை பிள்ளையார் சுழி போட்டு கொடுத்தது நான் தான். ஆசிய பணக்கார வரிசையில் உள்ள திமுக குடும்பத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டியது உங்களுடைய கடமை. அண்ணா திமுகவை ஆட்சி அமர்த்த வேண்டியது உங்களுடைய கடமை. உங்களுக்காக உழைப்பது எங்களின் உரிமை என்று பேசினார்.
முன்னதாக பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்படடிருந்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படங்களுக்குகழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]