நடப்பாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், சிறு, குறு தொழில்களை மேம்படுத்துவதற்கான அம்சங்கள் குறித்து கோவை மாவட்ட தொழிற்துறையினரின் எதிர்பார்ப்புகள் என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், முதல்முறையாக வரும் 18-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலகையே முடக்கிப்போட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தமிழ்நாட்டின் தொழில்துறையும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, தொழில் வளம் அதிகமாக காணப்படும் மாவட்டங்களில் ஒன்றான கோவை மாவட்டத்தில் முடங்கிப்போன தொழில்கள் மீண்டுவர உதவியாக, தாட்கோ வங்கிகள் மூலம் எளிய முறையில் கடன் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நமது நாட்டில் தயாரிக்கப்படும் பம்புசெட்டுகளில், 55 சதவீத பம்புசெட்டுகள் கோவை மாவட்டத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக பம்புசெட் தொழில் வர்த்தகத்தை அதிகரிக்கவும், அதனை நம்பியுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்தவும், தனியாகத்தொழிற்பேட்டைஅமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், கடந்த சில மாதங்களாகக் காப்பர், அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசுடன் இணைந்து மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்காணித்துத் தீர்வு காணும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் தொழில் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவற்றையெல்லாம் கடந்து, கோடைக்காலம் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில், காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரம் உள்ளிட்ட மாற்றுத் திட்டங்களை ஊக்குவிக்க நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கோவை மாவட்ட தொழில் துறையினர்களின் இந்த கோரிக்கைகள் அனைத்தும், தமிழ்நாடு பட்ஜெட்டில் நிறைவேற்றப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]