மசூதிகளில் சிவலிங்கத்தை தேடவேண்டாம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், “நாட்டில் சமீபமாக சில பிரசித்த பெற்ற முஸ்லிம் கோயில்கள் தொடர்பாக சில சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. வரலாற்றை நாம் மாற்ற முடியாது. கியான்வாபி சர்ச்சை இன்றைக்கு ஏற்பட்டது அல்ல. அதற்கு இப்போதைய முஸ்லிம்களோ, இப்போதைய இந்துக்களோ காரணமாக முடியாது. இது எப்போதோ நடந்த சம்பவம். இஸ்லாம் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்த மதம். அடக்கி ஆள நினைத்தவர்கள் கொண்டுவந்த மதம். அப்போது விடுதலை வேட்கையில் இருந்து நம் நாட்டு மக்களை உணர்வுபூர்வமாக தாக்க தேவஸ்தானங்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கோயில்கள் அழிக்கப்பட்டன.
சில இந்துக் கோயில்களுக்கு சிறப்பு அந்தஸ்து இருக்கிறது. அதாவது கியான்வாபி போல் இந்துக் கோயிலில் மசூதி இருக்கிறது. இதைத் தான் தற்போது இந்து சமூகத்தினர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனரே தவிர இந்துக்கள் முஸ்லிகளுக்கு எதிராக இல்லை. ஏனெனில் இப்போதைய முஸ்லிம்களின் மூதாதையர்கள் எல்லோரும் இந்துக்களாக தானே இருந்தனர்.
ஒருசில இடங்களில் நமக்கு நம்பிக்கை இருக்கலாம். அதைப்பற்றி நாம் பேசலாம். அதற்காக தினமும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்த அவசியம் என்னவிருக்கிறது. ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தை தேட வேண்டும்.
கியான்வாபி சர்ச்சையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவு எட்டப்பட வேண்டும். ஒருவேளை முடிவை எட்ட முடியவில்லை என்றால் தான் மக்கள் நீதிமன்றத்தை அணுகுகின்றனர். நீதிமன்றம் என்ன முடிவு செய்தாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது நீதித்துறையை நாம் புனிதமாக கருத வேண்டும். அதன் முடிவுகளை நாம் கேள்விக்கு உள்ளாக்கக் கூடாது.
ஆர்எஸ்எஸ் எந்தவிதமான மத வழிபாட்டுக்கும் எதிரானது அல்ல. நாங்கள் எல்லா மத வழிபாட்டையும் புனிதமானதாகவே கருதுகிறோம். சிலர் முஸ்லிம் வழிபாட்டு முறையை தேர்ந்தெடுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவருமே ரிஷிகளின், முனிகளின், சத்ரியர்களின் வழித்தோன்றல் தானே. நம் எல்லோருக்கும் ஒரே மூதாதையர் தான்” என்றார்.
கியான்வாபி சர்ச்சை, கிருஷ்ண ஜென்ம பூமி சர்ச்சை என பல்வேறு சர்ச்சைகளும் பெரிதாகி வரும் நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சு கவனம் பெற்றுள்ளது.
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]
- சோழவந்தானில் குடிநீர் குழாய் வரிசெலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும்சோழவந்தானில் குடிநீர் குழாய் வரி செலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும் பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுமதுரை மாவட்டம் […]
- தங்களது சொந்த ஊர்களில் பணியாற்றங்கள், தொழில் தொடங்குங்கள் -தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்புமதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் zohoநிறுவனத்தின் தலைவர் இந்திய தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்பு இந்தியர்கள் தொழில்நுட்பத்தை உருவாக்கி […]
- சிவகாசி குடிநீர் ஆதாரமான அணை பகுதியில், மேயர் தலைமையில் திடீர் ஆய்வுவிருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதரமாக இருப்பது வெம்பக்கோட்டை அணை.கோடை காலம் துவங்கியுள்ள […]
- திரையரங்கில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு-மனித உரிமை ஆணையம் விசாரணைரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்த சம்பவம் […]
- சிவகாசி அருகே, முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைதுவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே யுள்ள வெம்பக்கோட்டை – வனலிங்கபுரம் பகுதியில் உள்ள காப்புக் காடுகளில், […]
- மதுரை தோடனேரியில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம்மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் அருகே உள்ள தோடநேரி கிராமத்தில் தமிழக அரசின் மக்களை […]
- கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.29 லட்சத்தை தாண்டியதுஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.29 லட்சத்தை தாண்டியது.கடந்த 2019ம் ஆண்டு கொரோனா நோய் […]
- ராஜபாளையத்தில் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 30 குடும்பங்களை […]
- எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை -நடிகர் விஜய்சேதுபதி பேட்டிமதுரையில் முதல்வர் ஸ்டாலின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் […]
- திருப்பங்குன்றம் அருகே பட்டாகத்தியுடன் வந்து புல்லட் பைக் திருடிய திருடர்கள்திருப்பங்குன்றம்அருகே வலையபட்டியில் பட்டாகத்தியுடன் வந்து ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்திருடிய திருடர்கள்..வீடியோ காட்சிகள் வெளியீடுமதுரை மாவட்டம் […]
- ‘மை டியர் டயானா’ இணையத் தொடர் படப்பிடிப்பு துவக்கம்பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு […]
- தமிழகத்தின் ஆட்சி அமைப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம்- சரத்குமார் பேட்டிதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம் அதற்காக கட்சி நிர்வாகத்தை தொடர்ந்து […]
- ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டண உயர்வை குறைக்க […]
- பாலியல் தொல்லை பிரபல கல்லூரியில் தொடரும் போராட்டம்..!!மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் […]