தமிழகத்தில் நடக்கும் சர்வதிகார ஆட்சியை மக்கள் தூக்கி எரியும் காலம் நெருங்கி விட்டது என்று விருதுநகரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
அதிமுக நிறுவன தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகா் மேற்கு மாவட்ட கழகம், விருதுநகர் சட்ட மன்ற தொகுதி கழகம் சார்பாக விருதுநகரில் பாண்டியன் நகர் எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது. மாவட்ட கழக அமைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடிய வசனங்கள் எல்லாம் இன்றும் வாழ்க்கையின் நடைமுறையாக உள்ளது. அவர் சொன்னது எல்லாம் வேதவாக்காக உள்ளது. புரட்சித்தலைவர் சொன்னதெல்லாம் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. திமுக ஒரு தீய சக்தி என்று புரட்சித்தலைவர் அன்றே சொன்னார் அது தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. இன்றைக்கும் திமுக அவர்களது குடும்பத்தை மட்டும்தான் பார்க்கின்றனர். மக்களை பற்றி யோசிக்கவே இல்லை.
ஏமாற்றிய பிழைக்கும் கூட்டம் திமுக கூட்டம். பொய் சொல்லியே ஓட்டு வாங்கி விட்டனர். இரண்டு வருடங்கள் கூட ஆகாத நிலையில் எல்லா விலையும் ஏற்றி விட்டனர். ஏண்டா இந்த ஆட்சி வர விட்டோம் என்று மக்கள் நினைக்கின்றனர். கூடிய விலைவாசியை கட்டுப்படுத்த தமிழக முதல்வரால் முடியவில்லை. அரிசி, பருப்பு, சிமெண்ட், செங்கல், மண்ணு விலை விட கூடிவிட்டது.
அதிமுக ஆட்சி மீது எடப்பாடியார் ஆட்சி மீது மக்கள் மத்தியில் எந்தவித அதிப்தியும் கிடையாது. எங்களுடைய அலட்சியத்தில் தான் நாங்கள் ஆட்சியை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதை பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. திமுகவை மக்கள் எப்போதும் விரும்பி ஆட்சி கட்டில் அமர வைப்பது கிடையாது. அதிமுகவில் எப்பொழுதெல்லாம் பிரச்சனை வருகின்றதோ அப்போதெல்லாம் அதை பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு வந்து விடுகின்றது. தமிழகத்தில் தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நமது விருதுநகர் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தது நாங்கள், அடிக்கல் விழாவில் எங்களது பெயர் இருக்கும், திறப்பு விழாவில் திமுகவினர் பெயர் இருக்கும். நாங்கள் முழுவதும் கஷ்டப்பட்டு களை எடுத்து தண்ணி ஊத்துறது செடியை திமுகவினர் சத்தம் போடாமல் அறுத்துவிட்டு சென்று விட்டனர்.



திமுக ஆட்சிக்கு வந்தால் என்னை கைது செய்வார்கள் என்று தெரியும். நான் அந்த அளவுக்கு திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளேன். அதனால் என்னை ஜெயிலில் போட நினைத்து போட்டு விட்டனர். தற்போது சுப்ரீம் கோர்ட் ஜாமினில் வெளியே வந்துள்ளேன். திமுகவின் அடாவடி அராஜக போக்கு மூலம் அதிமுகவை எந்த காலத்திலும் அழிக்க முடியாது. நாளைக்கு இதே நிலைமை உங்களுக்கு திரும்பாதா என்று நினைத்து பார்க்க வேண்டும். நிலைமை எப்போது வேண்டுமென்றால் மாறலாம். திமுக கட்சி யாரையாவது வாழ வைத்ததாக வரலாறு கிடையாது. திமுக அரசு மக்கள் திட்டங்களை செயல்படுத்தாமல் போட்டோ சூட்டிங்கிலதான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். . வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரவுள்ளது. மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஒரு நாள் நீங்கள் செய்யும் தவறு ஐந்து ஆண்டுகள் நீங்கள் அனுபவிக்க வேண்டி உள்ளது. மக்கள் அதிமுகவுக்கு எப்போதுமே வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.
கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி கழகம் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
- சேது – நிறைவேறாத நல்ல கனவாகவே இருக்கட்டும் ?சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் பொது வெளியின் பேசு பொருளாகவந்துள்ளது. உச்ச நீதி மன்றத்திற்கு இந்திய […]
- அழகின் அழகே குளிர்கால டிப்ஸ்..குளிர்காலத்திற்கான சிறந்த பராமரிப்பு குறிப்புகள் நீங்கள் வசிக்கும்இடம் மற்றும் ஆண்டின் எந்த மாதத்தை பொறுத்து குளிர்காலம் […]
- ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர்… அதிரடியாய் வெடித்த கே.டி.ராஜேந்திரபாலாஜிஅதிமுக நிறுவன தலைவர் தமிழர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் […]
- தை தெப்பத் ஏழாம் நாள் திருவிழா திருப்பரங்குன்றம் முருகனுக்கு தீப தூப ஆராதனைதை தெப்பத் திருவிழா ஏழாம்நாள் இன்று இரவு அருள்மிகு சுப்பிரமணியசாமிக்கும், தெய்வானைக்கும் தீபாராதனை நடைபெற்ற காட்சி
- அனுமதியின்றி மரக்கடத்தல்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மரங்களை தொடர்ந்து அனுமதியின்றி […]
- அகில இந்திய மஜ்லிஸ் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு […]
- புதிய ஓய்வுதிய திட்ட எதிப்பு “கோரிக்கை மாநாடு” பிப்ரவரி 11ல் சென்னையில் நடக்கிறது.சென்னையில் நடைபெற உள்ள புதிய ஓய்வூதிய திட்ட எதிர்ப்பு கோரிக்கை மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பு […]
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 103:ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால்சிறியிலை வேம்பின் பெரிய கொன்றுகடாஅம் செருக்கிய […]
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு குருவிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.“என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.என் பணியாட்கள்கூட […]
- குறள் 367:அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும். பொருள் (மு.வ):ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் […]
- மாரடைப்பு… வகுப்பறையிலேயே உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவிமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த […]
- நாகர்கோவில்- நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றம்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசதிபெற்ற நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .கன்னியாகுமரி மாவட்டம் […]
- பேருந்தில் அபாயகரமான பயணம்… பள்ளி மாணவர்கள் சாகசம்..!!நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர்கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள்கோரிக்கைநீலகிரி மாவட்டம் கூடலூர் […]
- மாணவ மாணவிகளுக்கு உடல்நல குறைவு -விஜய் வசந்த எம்பி.ஆறுதல்கன்னியாகுமிரியில் என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் உடல் நலக்குறைவு விஜய்வசந்த எம்.பி. நேரில் பார்வையிட்டு […]