இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தில் நடிகை சிம்ரன், நடிகர் பாபி சிம்ஹா, சனத் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேமில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியானது. 50 -வது நாள் வெற்றிகரமாக ஓடிடியில் ஓடி கொண்டிருப்பதால் சீயான் விக்ரம் நன்றி தெரிவித்துள்ளதை கார்த்திக் சுப்புராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் “வாழ்க்கையில் நாம் விரும்பி செய்த ஒரு விஷயம் வெற்றியை தொடும்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் என் மனதில் இன்றும் ஒரு ‘sweet’ கனவாய் நிற்கிறது. அதே மகான் நான்கு மொழிகளில் அனைவரும் கண்டு ரசித்த ஒரு பிரமாண்ட வெற்றி படம் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
அப்படியே ஒரு வியக்கத்தக்க கேன்வாசில் மகானை கொண்டு போய் நிறுத்திய கார்த்திக் சுப்புராஜின் கைவண்ணம், எனக்கு அன்பாய் வழங்கிய சுதந்திரம், சின்ன சின்ன விஷயங்களை ரசித்து வழி நடத்திய விதம்.. அழகு. நன்றிகள் பல்லாயிரம்.
பாபிக்கு thanx. நீ இல்லாமல் என் சத்யா சாத்தியமே இல்லை. சிறப்பாக நடிப்பது தனக்கொரு இயல்பான talent-னு மீண்டும் சுட்டி காட்டிய சிம்ரனுக்கு thank you.த்ருவ். தனக்குள் இருக்கும் திறமையையும், தனித்துவத்தையும் வெளியே கொண்டு வந்து சவாலாக இமேஜ் தாண்டியதிற்கு.. hats-off மகனே. வியர்வை, ரத்தம், (நிஜமான) கண்ணீர் சிந்தி மகானின் வெற்றிக்கு உழைத்த மகான் gangற்கு ஒரு பெரிய salute.
எங்களுடன் ‘நீயா, நானா’ என்று வெறியோடு போட்டி போட்டு கலக்கிய சனா, ஷ்ரேயெஸ், தினேஷ்.. Rock on! மகானை நிஜமாக்கிய தயாரிப்பாளருக்கும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இல்லங்களிலும், உள்ளங்களிலும் கொண்டு சேர்த்த அமேசான் பிரைம் வீடியோவுக்கும் a big thank you” எனத் தெரிவித்துள்ளார்.
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள […]
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.பெரும்பள்ளம் […]
- மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் […]
- தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. […]
- திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய […]