அ.இ.அ.தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தொடர் குழப்பங்களும் மோதல்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்ற சில தினங்களிலேயே சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகள் உருவாகி பின்னர் மீண்டும் இணைந்தது. அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இடங்கள் உருவாக்கப்பட்டு ஓபிஎஸ், இபிஎஸ் என இரட்டை தலைமையில் அதிமுக செயல்பட்டு வந்தது. இந்த இரட்டை தலைமையில் சந்தித்த நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் படு தோல்வியை அதிமுக சந்தித்ததையடுத்து ஒற்றை தலைமை என்னும் முழக்கமும், இரட்டை தலைமையால் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட முடியாமல் பின்னடைவை அதிமுக சந்தித்தாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னோட்டமாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக குரல் எழுந்தது. பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் தனது ஆதரவு நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார். இருந்த போதும் எடப்பாடிக்கு 50க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களும் ஓபிஎஸ்க்கு 10 முதல் 15 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று நள்ளிரவு வரை இரண்டு தரப்பும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சிவி.சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இபிஎஸ் இல்லத்திலும், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்திலும் ஆலோசனை நடத்தினர். இதில் ஒற்றை தலைமை தொடர்பாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. எடப்பாடிக்கு 50க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் பொருளாளர் பதவி அல்லது அவைத்தலைவர் பதவி ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டு அமைதி காப்பாரா? அல்லது மீண்டும் தர்ம யுத்தம் தொடங்குவரா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]