தமிழகத்தில் ஏப்ரல் 10 முதல் 28ம் தேதிக்குள் 4 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும், ஏப்ரல் 17 முதல் 21ம் தேதிக்குள் 1முதல் 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இறுதி தேர்வை முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வுக்கான அட்டவணை மற்றும் முடிவு தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை வெயில் அதிகமாக இருப்பதால் 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தி விடுமுறை அளிக்க வேண்டும் என அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், 1 முதல் 9ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அனைத்து அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
அதில், தமிழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும், ஏப்ரல் 17 முதல் 21ம் தேதிக்குள் 1முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வை முடிக்க வேண்டும் என்றும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் வரும் ஏப்ரல் 29ஆம் தேதியில் இருந்து அடுத்த ஒரு மாதத்திற்கு கோடை விடுமுறை விடப்படும் எனத் தெரிகிறது. அதன்பிறகு ஜூன் 1 அல்லது 5ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக பின்னர் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை அவர்களுக்கென்று தனி தேர்வு அட்டவணை தயாரித்து, அதன்படி நடத்தி கொள்வர். இருப்பினும் பள்ளி வேலை நாளாக ஏப்ரல் 28ஆம் தேதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் முடிவில் மாற்றம் இருக்காது என்கின்றனர்.
- முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்திமல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்பாஜக […]
- செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது -முதல்வர் மு .க ஸ்டாலின்.மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என […]
- பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த […]
- புது நாடாளுமன்றம் திறக்கும் நாளில் நிலநடுக்கத்தால் குலுங்கிய தலைநகர் டெல்லிவரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி […]
- ரூ.75 நாணயம் கருப்பு நிறமாக இருப்பது ஏன்?இந்திய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு […]
- முதல் நாளே பிரச்சனை-புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது
- உலகபட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 1000 பேருக்கு மதிய உணவுஉலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு […]
- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!..வெயில் படிப்படியாக குறையும்தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக […]
- மருத்துவகல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து-தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்மருத்துவக்கல்லூரிக்கான அங்கீராரம் ரத்து செய்யப்பட தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கே காரணம் என […]
- பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா ரத்து -ஏற்புடையதல்ல! – எஸ்.டி.பி.ஐ.மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல! – […]
- 2023 ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு..கோப்பையை வெல்லுமா சென்னை அணி?ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று இரவு மோதுகின்னறன. இன்றுடன் 2023 ஐபிஎல் […]
- மதுரையில் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்குமதுரை பாண்டிகோவில் பகுதியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- […]
- ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் – மரக்காணம் கள்ளச்சாராய […]
- இன்று இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள்பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் […]
- கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழாகலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு […]