புதிய பட்ஜெட் எப்படி இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ.) 95-வது ஆண்டு மாநாடு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியது. தொடக்க விழாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- உற்பத்தி துறை மீது இந்தியா கவனம் செலுத்தக்கூடாது, அதற்கு பதிலாக சேவைத்துறையில் அக்கறை செலுத்த வேண்டும் என்று நமக்கு யோசனை சொல்லப்படுகிறது. ஆனால், சேவை துறையில் புதிய வாய்ப்புகளை ஆராய்வதுடன், உற்பத்தி துறையை மேலும் வலுப்படுத்துவது அவசியம். அதற்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த கண்டுபிடிப்புகளை தொழில்துறையினர் உன்னிப்பாக கவனித்துவர வேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதிய ஆற்றலில் இருந்து தொழில்துறை பலன் அடையலாம். நீண்டகாலமாக நிகழ்ந்து வரும் பொருளாதார மந்தநிலை, மேலைநாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட போதிலும், வேறு நாடுகளுக்கு இடம்பெயர நினைத்துக் கொண்டிருக்கிற முதலீடுகள், உங்களைத் தேடி வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அந்த முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு இழுக்க தொழில்துறையினர் வியூகம் வகுக்க வேண்டும். உலகம் தூய்மையான எரிசக்தியை நோக்கி இடம்பெயர்ந்து வருவதால், வளர்ந்த நாடுகள் உங்கள் மீது அதிக வரி விதிக்கக்கூடும். ஜி20 மாநாட்டின்போது, இந்தியாவின் சாதனைகளை விளம்பரப்படுத்துவோம். இந்தியாவில், 14 கோடி நடுத்தர வருவாய் குடும்பங்களும், 1 கோடியே 40 லட்சம் உயர் வருவாய் குடும்பங்களும் அதிகரிக்கும். இதனால், பொருட்களின் தேவை அதிகரிக்கும். வரும் நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட், முந்தைய பட்ஜெட்டுகளின் ஆன்மாவை பின்பற்றியே இருக்கும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்வதாக இருக்கும். 2047-ம் ஆண்டில், மிகவும் வளர்ச்சியடைந்த இந்தியாவில் நமது குழந்தைகள் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
- மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாபுதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் […]
- மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள்- போலீசார் இடையே தகராறு-வீடியோடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் […]
- ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டிஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை […]
- சேலம் அருகே நில அதிர்வு… மக்கள் பதட்டம்சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் மிகப்பெரிய அளவில் சத்தத்துடன் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் […]
- மோடி அரசுக்கு எதிராக புதிய பிரச்சாரத்தை தொடங்கி காங்கிரஸ்மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி, வீடு வீடாகச் சென்று கடிதம் அளிக்கும் புதிய பிரச்சாரத்தை […]
- ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி..!மறைந்த திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி […]
- கல்லூரி மாணவ,மாணவிகளுக்காக பேருந்தில் பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர்முகவூர் செட்டியார்பட்டி தளவாய்புரம் போன்ற பகுதிகளை சாரந்த 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சிவகாசி […]
- கன்னியாகுமரியில் பரபரப்பு…. பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்கன்னியாகுமரியில் நடைபெற்ற என்சிசி முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்குவாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொட்டாரம் அரசு […]
- லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்நாகர்கோயிலில் வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. […]
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அ.ம.மு.க. வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்ற க ழக வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் […]
- கருணை கொலை பற்றி பேசும் தலைக்கூத்தல்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் உருவாக்கத்தில் கடந்த 14 வருடங்களாக படங்களை YNOT ஸ்டுடியோஸ் தயாரித்து […]
- இரட்டை இலை சின்னம்: இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் முடிவுஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்இரட்டை இலை சின்னத்தை பெற உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 102: கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப் பைங் கிளிஅஞ்சல் ஓம்பி ஆர் […]
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காகஉழைக்கும் போது மனிதனாகிறான்ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும்போதுஅவன் உண்மையான மனிதனாகிறான். […]