தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் தமிழக அரசு சட்டசபையில் மீண்டும் நீட் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் என்ன செய்ய வேண்டும்?
என்பது குறித்து அரசியல் சாசனம் தெளிவாக விளக்குகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ‘நீட்’ தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்தினார்.
மேலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்த பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தங்களது ஆய்வு அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது. இதில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை விரும்பவில்லை என்பது தெரியவந்தது. மேலும், தமிழக சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தமிழக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், தமிழக சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட்டது. இந்த மசோதா தமிழக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது அல்ல என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி உள்ளார். இந்த நிலையில் தமிழக அரசு சட்டசபையில் மீண்டும் நீட் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இப்படி மசோதாவை ஆளுநருக்கு அனுப்பும் பட்சத்தில் அவர் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி இந்திய அரசியல் சாசனத்தின் 200-ம் பிரிவு தெளிவுபடுத்துகிறது.
அந்த அரசியல் சாசனத்தில் கூறுவது இதுதான்:- சட்டசபையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற அதை ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதை பெற்றுக்கொள்ளும் ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதாக அறிவிக்க வேண்டும். அல்லது ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக தெரிவிக்க வேண்டும் அல்லது குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக அனுப்பி வைக்க வேண்டும்.
ஆளுநரிடம் மசோதா அளிக்கப்பட்ட பிறகு, அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆளுநர் நினைத்தால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை திருப்பி அனுப்பி அது தொடர்பான காரணங்களை குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும். அப்படிதிருப்பி அனுப்பப்படும் மசோதாவை சட்டசபையில் மறுபரிசீலனை செய்து அதில் திருத்தும் செய்து கொண்டு வந்தோ அல்லது திருத்தும் இல்லாமலோ ஒப்புதலுக்காக ஆளுநரிடம் அரசு மீண்டும் அனுப்பி வைக்கும்பட்சத்தில் அதன்பிறகு அந்த மசோதாவை ஒப்புதலுக்காக ஆளுநர் நிறுத்தி வைக்க கூடாது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்க கூடாது. இதற்கு மாறாக குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அதை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி தகவல் பொதுமக்கள் கவனமாக இருக்க […]
- தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது […]
- மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னைமெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, […]
- மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஅவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் […]
- மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டிதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை […]
- சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிவைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு […]
- பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் […]
- ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு!..சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் […]
- சாராயத்தை உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது […]
- இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 […]
- 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!..திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது […]
- சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனாதனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது […]
- செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி […]
- 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற […]
- 500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்புதமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு […]