சாத்தூர் ஒன்றியம் ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக சென்ற முருக பக்தர்களை சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகக்கனி திருச்செந்தூரில் வரவேற்றார். மேலும் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சண்முகக்கனி தலைமையில் இரவு அன்னதானம் வழங்கப்படவும் உள்ளது.