• Thu. Apr 25th, 2024

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்-மக்கள் அவதி

Byமதி

Nov 18, 2021

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் பலத்த மழை தாயில்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி –

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்தது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் சாத்தூர் /தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், இரவார்பட்டி, சல்வார்பட்டி /படந்தால், சுப்பிரமணியபுரம், இருக்கன்குடி உள்ளிட்ட பல பகுதியில் மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது .


தாயில்பட்டியில் இரண்டு மணி நேரமாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது – இதனால் செக்கடி தெருவில் பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால் பெரும் பாதிப்படைந்துள்ளனர் -இதே பகுதியில் வசித்து வரும் ராமசுப்பிரமணியன் மாற்றுத்திறனாளி இவர் வீட்டில் மழை நீர் புகுந்து பெரும் அவதிப்பட்டு இவருடன் மூன்று பெரியவர்கள் 4 சிறுவர்கள் இந்த வீட்டில் வசித்து வருவதாகவும் தற்போது மழைநீர் புகுந்து இருப்பதால் தாங்கள் தங்குவதற்கு வழியின்றி தவிப்பதாகவும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளியான ராமசுப்பிரமணியன் கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *