நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மதுரை மாவட்டத்தில் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
குறிப்பிடத்தக்க அளவில் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஐந்து மணியிலிருந்து 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களின் வருகை பெரும்பாலான வாக்குச் சாவடிகளிலும் மையங்களிலும் குறைவாகவே இருந்தது.
மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் ஐந்து வாக்குச்சாவடிகள் இடம்பெற்றிருந்தன. அதில் 363ஆம் எண் உள்ள வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1, 141 என்றிருந்த நிலையில் வாக்குப் பதிவு நேரம் முடியும் வரை 551 வாக்குகளே பதிவாகியிருந்தன. அக்குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் தேர்தல் அலுவலர் முறையாக வாக்குப் பெட்டிக்கு பிற அலுவலர்கள் முன்னிலையில் சீல் வைத்து வாக்குப் பதிவை நிறைவு செய்தார்.
மதுரை மாவட்டம் முழுவதும் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில் அனைத்து வாக்கு மையங்களில் இருந்து லாரிகள் மூலம் அந்தந்த வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பப்பட்டன. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் பாத்திமா கல்லூரி, வக்ஃபு வாரிய கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் எண்ணப்பட உள்ளதால், மேற்கண்ட கல்லூரிகளுக்கு பதிவான வாக்கு பெட்டிகள் அனைத்தும் அனுப்பப்பட்டன.
வருகின்ற 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]