நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மதுரை மாவட்டத்தில் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
குறிப்பிடத்தக்க அளவில் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஐந்து மணியிலிருந்து 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களின் வருகை பெரும்பாலான வாக்குச் சாவடிகளிலும் மையங்களிலும் குறைவாகவே இருந்தது.
மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் ஐந்து வாக்குச்சாவடிகள் இடம்பெற்றிருந்தன. அதில் 363ஆம் எண் உள்ள வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1, 141 என்றிருந்த நிலையில் வாக்குப் பதிவு நேரம் முடியும் வரை 551 வாக்குகளே பதிவாகியிருந்தன. அக்குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் தேர்தல் அலுவலர் முறையாக வாக்குப் பெட்டிக்கு பிற அலுவலர்கள் முன்னிலையில் சீல் வைத்து வாக்குப் பதிவை நிறைவு செய்தார்.
மதுரை மாவட்டம் முழுவதும் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில் அனைத்து வாக்கு மையங்களில் இருந்து லாரிகள் மூலம் அந்தந்த வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பப்பட்டன. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் பாத்திமா கல்லூரி, வக்ஃபு வாரிய கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் எண்ணப்பட உள்ளதால், மேற்கண்ட கல்லூரிகளுக்கு பதிவான வாக்கு பெட்டிகள் அனைத்தும் அனுப்பப்பட்டன.
வருகின்ற 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
- தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் செல்கிறது – ஓபிஎஸ்திமுக அரசு கொலை,கொள்ளை,தற்கொலை என்ற பாதைக்கு தமிழகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]
- ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் வெளியிட்ட […]
- மே.24ல் மேட்டூர் அணை திறக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்புகுறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே.24ம் தேதி திறக்கப்படும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக […]
- மாவீரனாக களம் கான இருக்கும் சிவகார்த்திகேயன்…தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவர் தமிழ் […]
- இதுதான் புதிய இந்தியா… நடிகர் மாதவன் புகழாரம்…பிரான்ஸ் நாட்டில் 75 வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் […]
- மகளை கொலை செய்த வழக்கில் இந்திராணிக்கு ஜாமீன்…மகளை கொலை செய்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திராணிக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
- ராஜீவ் கொலையாளிகளை கட்டியணைப்பதா- தி.மு.க.வுக்கு கண்டனம்ராஜீவ் கொலையாளிகளை கட்டியணைப்பது நெஞ்சை பிளக்கும் செயலாக உள்ளது- தி.மு.க.வுக்கு மயூரா ஜெயக்குமார் கண்டனம்முன்னாள் பிரதமர் […]
- நாய்க்குட்டியை திருடிச்செல்லும் இளைஞர்கள்-சிசிடிவி காட்சி வெளியீடுவீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை புல்லட்டில் வந்து திருடிச்செல்லும் இளைஞர்கள்-சிசிடிவி காட்சி வெளியீடு- காவல்துறை விசாரணை.மதுரை […]
- கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருக்காங்களா..???தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் […]
- லாக்அப் மரணங்களை தடுக்க காவலர்களுக்கு பயிற்சி முகாம் -டி.ஜி.பி.சைலேந்திரபாபு தகவல்காவல் நிலையத்தில் ஏற்படும் லாக் அப் மரணங்களை தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சியில் […]
- 1000 கோடி ஏலத்திற்கு விலைபோன உலக வரலாற்று கார்…உலக வரலாற்றிலேயே பழைய கார் ஒன்று ஏலத்தில் ஆயிரம் கோடிக்கும் மேல் முதன்முறையாக விற்பனையாகியுள்ளது. என்னதான் […]
- உக்கிரமான உக்ரைன்-ரஷ்யா போர்…உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரால் பல […]
- தால் இட்லி:தேவையானவை:துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், புழுங்கல் அரிசி […]
- நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலை-மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் மற்றும் நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை முதல்-அமைச்சர் […]
- தமிழகத்தில் புதிய வகை கொரோனா..தமிழகத்தில் அமைக்க BA 4 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் […]