இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா உடன் இணைந்து பிரபல தாவர இறைச்சி நிறுவனத்தில் மிகப்பெரிய முதலீடுகளை செய்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து புதிய உணவு புரட்சி ஒன்றுக்கு அடிதளம் போட்டுள்ளார்.
அதாவது, சைவ இறைச்சி (plant-based meat) என அழைக்கப்படும் தாவரத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் இறைச்சி மாதிரியான உணவுகள்தான் இன்று மார்டன் உலகில் பிரபலமாகி வரும் ஓர் உணவு வகை.
இந்நிலையில், இவர்கள் இருவரும் மும்பையைச் சேர்ந்த தாவர இறைச்சி சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘Blue Tribe Foods’ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அனுஷ்கா, விராட் இருவருமே சைவ பிரியர்கள்.
தங்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு கடந்த சில வருடங்களாக இவர்கள் அசைவ உணவுகளை தவிர்த்து, இறைச்சிகள் இல்லாத உணவு முறையை கடைபிடிப்பதாக பல முறை தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தான் ‘Blue Tribe Foods’ நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதுடன், அந்த நிறுவனத்தின் விளம்பர வீடியோவில், “எதிர்கால சந்ததியினருக்கும் இந்த பூமியை வாழ சிறந்த இடமாக மாற்றுவது என்பது பற்றி விராட்டும் நானும் தொடர்ந்து பேசிக்கொள்வோம். எங்கள் வாழ்க்கையின் அம்சங்களில் ஒன்று தாவர உணவு வகைகளை முழுவதும் ஏற்றுக்கொண்டது.
எந்த இறைச்சியையும் உட்கொள்ள மாட்டோம். நாங்கள் இருவருமே உணவுப் பிரியர்கள். அதனால் சில நேரங்களில் இறைச்சி வகை உணவுகளை மிஸ் செய்வதும் உண்டு.
ப்ளூ ட்ரைப் உடனான ஒத்துழைப்பு, தாவர அடிப்படையிலான உணவுக்கு மாறுவதன் மூலம் மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க முடியும். அதிகமான மக்கள் அதன் அவசியத்தைப் புரிந்துகொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதன்மூலம் இந்த பூமியின் மேம்பட்ட வாழ்க்கைக்கும் உதவுங்கள்” என்று அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான ப்ளூ ட்ரைப் ஃபுட்ஸ், சந்தீப் சிங் மற்றும் நிக்கி அரோரா சிங் என்ற இருவரால் தொடங்கப்பட்டது. இது இந்திய சந்தையில் இறைச்சி அடிப்படையிலான தயாரிப்புகளுக்கு மாற்றாக பட்டாணி, சோயாபீன், பருப்பு, தானியங்கள் மற்றும் பிற புரதம் நிறைந்த பொருட்களை கொண்டு தாவர இறைச்சி உணவுகளை தயாரித்துவருகிறது.
கடந்த வருடம் பாலிவுட் செலிபிரிட்டி தம்பதிகளான ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் இமேஜின் மீட்ஸ் என்ற தாவர இறைச்சி நிறுவனத்தில் முதலீடுகளை செய்தனர். இவர்கள் வரிசையில் தற்போது லேட்டஸ்ட் வரவுதான் மற்றொரு நட்சத்திர தம்பதிகளான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா.
- ‘உன்னால் என்னால்’ விமர்சனம்சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற முகம் […]
- மணலியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாள ஆசாமிகள் கைது..!மணலியில் ஆன்லைன் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாளத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மணலியில் […]
- ஜியோ மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்கசென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!சென்னையில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள ஜியோ நிறுவன மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்க […]
- மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பேர் பயணம்..!சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 4 மாதங்களை விட, மே மாதம் அதிகமான பயணிகள் பயணம் […]
- சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.சங்கரன்கோவில் […]
- “காவிஆவி நடுவுல தேவி ” படத்தின் டிரெய்லரைசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள ” காவி ஆவி நடுவுல தேவி” திரைப்படத்தின் […]
- மேகதாது விவகாரத்தில் தி.மு.க – காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது..,ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு..!கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும், […]
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்..!கன்னியாகுமரியில் கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று […]
- நேர்த்தி என்பது நம்மிடம் இல்லை இயக்குநர் செல்வராகவன்‘என்.ஜி.கே’ படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செல்வராகவன் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.செல்வராகவன் […]
- நாயகி பேசும் வசனமே மிரட்டல்..!” – நாயகன் சித்தார்த் பாராட்டு!பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷின் எழுத்து, […]
- இன்று உலக பெற்றோர்கள் தினம்..!உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று […]
- இன்று இயந்திரங்களின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த..,நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் பிறந்த தினம்நடைமுறை இயந்திரங்களின் அடிப்படையாக உள்ள பெரும் புகழ் வாய்ந்த கார்னோட்வின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த நிக்கலாஸ் லெனார்ட் […]
- சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில்..,அய்யனார் குதிரை எடுப்பு விழா..!மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் குதிரை எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. […]
- சமயநல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..!சமயநல்லூர் அருகே தேனூர் கட்டப்புளி நகரில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசிதிருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் […]
- குமரியில் அமைச்சரைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!பாரதப் பிரதமர் நரேந்தி மோடியை அவதூறாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்தும், அவரை […]