கன்னியாகுமரி மாவட்டத்தின் மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோடு பகுதியில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த போது அங்கு உள்ள அதங்கோட்டாசான் திருவுருவச் சிலைக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த வாக்கு சேகரிப்பின் போது சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் உட்பட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.