அரசரடி, வெள்ளிமலை, ராஜீவ் நகர், இந்திரா நகர் ,பொம்முராஜபுரம் உள்ளிட்ட கிராமங்கள் மேகமலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலை கிராமங்களில் இலவம் பஞ்சு, ஏலக்காய், முருங்கை பீன்ஸ் உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாயிகளை வெளியேற்றுவதற்கு வனத்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக விவசாய நிலங்களில் உழவு செய்தல், புதிய மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரிப்பு பணிகள் செய்ய வனத்துறை தடை விதித்துள்ளது. மலைக் கிராம விவசாயிகள் சார்பில் வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்கக் கோரி பல்வேறு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை.
தற்போது இலவம் பஞ்சு சீசன் துவங்கியுள்ளதால் அதனை பதம் பிரிக்க கோரையூத்து, அரண்மனைப்புதூர் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் அரசரடிக்கு செல்லக்கூடிய அரசு பேருந்தில் கூலி வேலைக்கு சென்றனர். அப்போது மஞ்சனூத்து செக் போஸ்டில் இருந்த வனத்துறையினர் கூலி வேலைக்கு யாரும் செல்லக்கூடாது என்று பஸ்சை நிறுத்தி சம்பந்தப்பட்ட பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கோரையூத்து, அரசரடி சேர்ந்த விவசாயிகள் வனத்துறையை கண்டித்து மஞ்சனூத்து செக்போஸ்ட் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி டி.எஸ்.பி., தங்க கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் குமரேசன், மேகமலை ரேஞ்சர் சதீஷ் கண்ணன், வருஷநாடு ரேஞ்சர் ஆறுமுகம் , ஊராட்சி மன்ற தலைவர் பால் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன், சார்பு ஆய்வாளர்கள் ராமசாமி, அருண்பாண்டியன், ஊராட்சி செயலாளர் ராமசாமி, எஸ்.பி. தனிப்பிரிவு போலீசார் பாண்டியராஜன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வரக்கூடிய காலங்களில் விளைபொருள் எடுப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் சார்பில் இடையூறு இருக்காது என்று தெரிவிக்கப்பட்ட பின்னரே விவசாயிகள் கலைந்து சென்றனர்.

விவசாயிகள் கூறுகையில், அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த மூன்று தலைமுறையாக குடியிருந்தும், இலவம்பஞ்சு, ஏலக்காய், பீன்ஸ் உள்ளிட்ட விவசாயம் செய்து அதில் வரக்கூடிய வருவாயை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். கடந்த சில மாதங்களாகவே வனத்துறையினர் தொடர்ந்து எங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தற்போது இலவம்பஞ்சு சீசன் துவங்கியுள்ளதால் அதனை பதம் பிரிக்க விடாமல் வனத்துறையினர் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கின்றனர் என்று குற்றம் சாட்டினர்!

- அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேச்சு.ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என கே..கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் […]
- ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்கள் […]
- காங்கிரஸ் குறித்து பிரசாந்த் கிஷோர் பரபரப்பு டூவிட்குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு தகவல்கடந்த சில தினங்களுக்கு […]
- ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்தமிழகத்தில் பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்- என மத்திய ரெயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் […]
- முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகழுகுமலையில் முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகொடியேற்றத்துடன் துவங்கியது .அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கழுகுமலை மேலக்கேட் […]
- இரு ரயில்வே சங்க நிர்வாகிகளுக்கிடையே அடிதடிமதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரு ரயில்வே சங்க நிர்வாகிகள் அடிதடி ஈடுபட்டதால் பரபரப்பு.’சதர்ன் […]
- மீண்டும் வருகிறாள் சந்திரமுகி… விரைவில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே […]
- காங்கிரஸ் கட்சிக்கு அவமானமாக இல்லையா…? குஷ்பு சாடல்இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பேரறிவாளன் அனுபவித்து வந்தார். […]
- கள்ளச்சாரயத்தை ஒழிக்க வீதியில் இறங்கி போராடுவோம் – எடப்பாடிபழனிசாமிதமிழக அரசு கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை […]
- வாட்ஸ்-அப் பயனாளிகளுக்கு விரைவில் புதிய வசதிவாட்ஸ் அப் இல்லைஎன்றால் உலகமே முடங்கிவிடும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது.புகைப்படங்கள்,வீடியோக்கள்,வீடியோகாலில் பேச, என தனிப்பட்ட […]
- பல வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர், மரணத்திடம் தோல்வி..குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஜெர்மனி வீரர் மூசா யாமக் போட்டிக்களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த […]
- பாலியல் குற்றச்சாட்டு-எலான்மஸ்க் மறுப்புவிமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உலகின் முதன்மை பணக்காரர்களுள் […]
- மொழியை வைத்து சர்ச்சை… பிரதமர் விமர்சனம்…இந்தியாவில் அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். […]
- முன்கூட்டியே துவங்குகிறது தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை ஜூன் முதல் அல்லது 2 வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 […]
- திவாலான இலங்கை அரசு… இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு…இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]