தமிழக அரசு அறநிலை துறை மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருபவர்கள் இடம் வாடகை வசூல் செய்ய உத்தரவிட்டு வசூல் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சர்வே எண் 711-ல் 1700 சதுர அடி மற்றும் 533 சதுர அடி பரப்புள்ள இரண்டு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்த சிலர் கோயிலுக்கு வாடகை தொகை, கடந்த பத்து வருடங்களாக கட்டாமல் இருந்துள்ளனர்.
இதனை அடுத்து தமிழக அரசு அறநிலைத்துறை உத்தரவின்படி சட்டப்பிரிவு 79 -ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து தேனி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன், ஆலய நிலங்கள் வட்டாட்சியர் பிரதீபா, கோவில் செயல் அலுவலர் தங்கலதா, சரக ஆய்வர் கார்த்திகேயன் மற்றும் செயல் அலுவலர்கள் சுரேஷ், வைரவன், போத்தி செல்வி, நரசிம்மன் ஆகியோர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட வாடகைதாரரிடம் பாக்கி தொகை நான்கு லட்சத்து 10 ஆயிரத்தை கட்டச் சொல்லி கூறினார்கள்.
மதியம் ஒரு மணிவரை அவர்களுக்கு கெடு விதிக்கப்பட்டது. இல்லையென்றால் வீடு சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .இதனைதொடர்ந்து அந்த இடத்தில் வசித்து வந்த உமா மகேஸ்வரி என்பவர் மதியம் ஒரு மணி அளவில் மேற்படி ரூபாய் 4 லட்சத்து 10 ஆயிரத்து 5-ஐ உடனடியாக கோயில் நிர்வாகத்திடம் செலுத்தினார். இதனையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது ஆண்டிபட்டி டிஎஸ்பி. தங்க கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவகுமார், காவல்துறையினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வருவாய் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]
- சசிகலாவுடன்- நடிகை விஜயசாந்தி ரகசிய சந்திப்புநடிகையும்,பாஜக முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி -சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அ.தி.மு.க.க்கு தான் தலைமை […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட […]
- அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் […]