பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம். அண்மையில் குடியரசு தினவிழாவையொட்டி அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவர் காலமானார்.
வாணி ஜெயராம் தனது வீட்டின் படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு அவர் உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை – ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வாணி ஜெயராம் வீட்டில் பணிபுரிந்து வரும் மலர்க்கொடி கூறும்போது, “நான் எப்போதும் காலை 10.15 மணிக்கு வீட்டிற்கு வருவேன். அப்படித்தான் இன்றும் 10.45 மணி அளவில் வீட்டுக்கு வந்த காலிங்பெல் அடித்தேன். நான்கு, ஐந்து முறை பெல் அடித்தும் கதவை திறக்கவில்லை. அப்போது எனக்கு சந்தேகம் வந்ததது. பின்னர் போன் செய்தேன் எடுக்கவில்லை என் கணவரிடம் தொலைபேசியில் அழைக்கச் சொன்னேன். அவரும் ஐந்து முறை முயற்சித்தும் தொலைபேசி அழைப்பு எடுக்கப்படவில்லை. கீழ் வீட்டுக்காரரிடம் சென்னோம். பிறகு, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தோம். உள்ளே சென்று பார்த்தபோது அவர் படுக்கை அறையில் கீழே விழுந்து கிடந்தார். அவரது நெற்றியில் அடிப்பட்டிருந்தது. நான் 10 வருடங்களாக இங்கே பணி செய்து வருகிறேன். அவருக்கு உடல்நிலை நன்றாகத்தான் இருந்தது. எந்தப் பிரச்சினையுமில்லை. அவர் என் தாயைப் போல. நாங்கள் அம்மா – மகள் போல பழகுவோம்” என்றார் மலர்க்கொடி.
வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இசைக் குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம், ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டு பாலிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர். பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ள இவர், பல்வேறு மொழிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
- மாலை அணிந்து கொடுங்கலூர் சென்ற பக்தர்கள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு மாலை […]
- ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மஞ்சூரில் ஆர்ப்பாட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் குந்தா வட்டார காங்கிரசின் சார்பில் ராகுல்காந்தி அவர்கள் மீது […]
- குந்தா அணையில் குப்பைகளை அகற்ற முன்னோட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா அணையில் தங்கி உள்ள குப்பைகள் செடி, கொடி இலை அகற்றும் […]
- 2022-2023 ஆம் ஆண்டிற்கான கணிதக் கண்காட்சிநீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு பெண்கள் உயர்நிலைப் நிலைப் […]
- தேசிய பங்குசந்தை பட்டியலில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்தமிழ் திரையுலகில் அதிக படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், […]
- மதுரை அருகே சந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைதுமதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி […]
- லைஃப்ஸ்டைல்:புதினா சுருள்சப்பாத்தி: தேவையானவை:கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு […]
- காவிய நாயகி வேடத்தில் சமந்தா..!காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலம் என்ற திரைப்படத்தில் காவிய நாயகி வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.தென்னிந்தியாவின் […]
- சூதாட்டத்தை ஆடிவிட்டு அதற்கு ஆதரவாக நடிகர்கள் விளம்பரம் செய்யவேண்டும்-விக்கிரமராஜா பேட்டிஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு […]
- ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதுராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது எம்.பி பதவியை பறித்து […]
- முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது […]
- ஏப்ரல் மாதம் வெளியாகும் ” ரஜினி ” படம்வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் […]
- N4 திரை விமர்சனம்சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக […]
- இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த தினம்X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த […]