இயற்கையையும், மரங்களையும் நேசிக்கும் அதிகாரியாக திகழும் நெல்லை மணிமுத்தாறு சிறப்பு காவல் படை கமாண்டன்ட் கார்த்திகேயனுக்கு அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
கடினமான காவல் பணிகளுக்கு இடையேயும் இயற்கையையும், மரங்களையும் நேசிக்கும் காவல்துறை அதிகாரிகள் தமிழக காவல்துறையில் ஆங்காங்கே சிலர் உள்ளனர். அந்த வரிசையில் இடம்பெற்று மரங்களையும், இயற்கையையும் நேசிக்கும் அதிகாரியாக வலம் வருகிறார் நெல்லை மணிமுத்தாறு சிறப்பு காவல் படை கமாண்டன்ட் கார்த்திகேயன். இவர் தனது பள்ளி, கல்லூரி நாட்களிலேயே இயற்கையையும், மரங்களையும் நேசித்து வளர்ந்தவர்.தான் பணி புரியும் அனைத்து இடங்களையும் பசுமையான சோலையாக மாற்றியவர். மேலும் மனிதநேயத்துடன் பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்கள் மத்தியில் இயற்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி மரங்களை வளர்த்து பாதுகாக்க அறிவுரை கூறி வருகிறார். மேலும் காவல்துறை மூலம் காணி குடியிருப்பு மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவரது சிறப்பான காவல்துறை பணிக்காக கடந்த ஆண்டு ஜனாதிபதி பதக்கம் பெற்றுள்ளார்.இவரது பணிகளை கேள்வியுற்ற அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை நிறுவனர் கல்வியாளர் முனைவர். குணசேகர் அரியமுத்து இவருக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி, மரக்கன்றுகளையும் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். இது குறித்து அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை நிறுவன தலைவர் குணசேகர் அரியமுத்து கூறும் போது,
“நாம் வாழும் இந்த உலகை பசுமையாக பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இதனை கருத்தில் கொண்டு அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை பல்வேறு நிகழ்வுகளில் மரக்கன்றுகளை வழங்கி வருகிறது. எங்கள் அறக்கட்டளை மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதைப்போல பசுமையை பேணும் ,
மரங்களை நேசிக்கும் பலரை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களை பாராட்டி வருகிறோம்.
நெல்லை மணிமுத்தாறு சிறப்பு காவல் படை கமாண்டன்ட் திரு. கார்த்திகேயன் அவர்கள் இயற்கை நேசிக்கும் ஒரு காவல்துறை அதிகாரி. அவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் முடிந்த வரையில் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரிக்கும் வேலைகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.மேலும் மனித நேயத்துடன் பல உதவிகளையும் செய்து வருகிறார்.இவரை அறிவுச்சுடர் அரியமுத்து அறக்கட்டளைசார்பில் மனதாரப் பாராட்டுகிறோம்” என்றார்.
நிகழ்வில் லயன்ஸ் கிளப் அருண் இளங்கோ, மணிமுத்தாறு சிறப்பு காவல் படை உதவி கமாண்டர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரிநிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு […]
- மதுரை செல்லம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை […]
- ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழாமதுரை மாவட்டம் தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்ள்ளியில் ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா நடைபெற்றது. […]
- ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்ன? எடப்பாடி பழனிசாமிஇன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெடில் அறிவிக்கப்பட்டரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை என எடப்பாடி […]
- சோழவந்தானில் பங்குனி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புசோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ […]
- விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிஇன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் […]
- திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மணமக்கள்..!கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் சிலம்பம் […]
- தஞ்சாவூரில் இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி..!தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறாக இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் […]
- நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி..!நெல்லையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருநெல்வேலி மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் […]
- 8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சிராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் […]
- பேராபத்தை சந்திப்போம்-ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் […]
- மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசுமதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக […]
- அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே […]
- இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில்..
முதலிடம் பெற்றுத் திகழ்வது தமிழ்நாடுதான்..!இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை […] - லைஃப்ஸ்டைல்உடற்பருமனும் அதனைக் குறைக்கும் வழிகளும்: