• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையத்தில், வ உ சி பிறந்தநாள் கோலாகல கொண்டாட்டம்

ByKalamegam Viswanathan

Sep 5, 2024

வ உ சி பிறந்தநாள் கோலாகல கொண்டாட்டம் மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசி கப்பல் ஒட்டிய வ. உ . சிதம்பரனாரின் 153 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் சுதேசி கப்பல் ஒட்டிய வ உ சிதம்பரனார் சிலைக்கு சமுதாய மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை 153வது பிறந்த தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவனியாபுரம் வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர். பி சி எம் சொல்கேஸ்,அரண்மனை தங்கபாண்டியன் பேராசிரியர் மனோகரன் பழனி கௌதம், மாரிமுத்து மற்றும் அதிமுக, திமுக , நாம் தமிழர், காங்கிரஸ் கட்சி நிர்வாசிகள் ovs கஜேந்திரன், கவுன்சிலர் ராமசாமி, வெற்றிவேலன், கார்திக், சோலை மலை, பிச்சை காந்தி, பிசிஎம் ரமேஷ், முகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.