ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னாள் அதிபர் டிரம்ப் தனது பதவிக் காலத்தில் 2018-ம் ஆண்டு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். அத்துடன் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அணுசக்தி ஒப்பந்தத்தின் சில முக்கிய நிபந்தனைகளை ஈரானும் புறக்கணித்தது.
இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஆர்வம் காட்டி வருகிறார்.
ஆனால் தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கினால் மட்டுமே பிரச்சனை முழுமையாக முடிவுக்கு வரும் என ஈரான் கூறி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
ஈரானில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் முந்தைய டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட சில பொருளாதாரத் தடைகளை ஜோ பைடன் நிர்வாகம் தற்போது ரத்து செய்துள்ளது.
இது அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஒரு முக்கிய நடவடிக்கையாக இது அமையும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கியதை வரவேற்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும் ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]
- சசிகலாவுடன்- நடிகை விஜயசாந்தி ரகசிய சந்திப்புநடிகையும்,பாஜக முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி -சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அ.தி.மு.க.க்கு தான் தலைமை […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட […]
- அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் […]
- பாமக தலைவராக அறிவிக்கப்படுகிறார் அன்புமணிசென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி […]
- குரங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்…லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 […]
- வெளியானது நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத் தேதி…நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் […]
- அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம்சிறுபான்மை மக்கள் நல கட்சி அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
- ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுதலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஒட்டிகளுக்கு தொப்பி, கூல்டிரிங்க்ஸ் வழங்கிய […]
- புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள்மதுரை புது மண்டபத்தில் உள்ள கடைகளில் பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உலகப் […]
- மதுரை – தேனி விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு- கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கைமதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் நேற்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் […]
- காட்டுயானை தாக்கி டீக்கடைக்காரர் பலி!கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தருமலிங்கம். இவரது மகன் ஆனந்தகுமார்(வயது […]
- இன்று கருணாநிதி சிலையை-வெங்கையாநாயுடு திறந்து வைக்கிறார்சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்புசென்னை ஓமந்தூரார் அரசினர் […]