நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ்,விசிக உள்பட ஒரு சில கட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு வற்புறுத்துகின்றனர். இதனால் மற்ற கட்சி தொண்டர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளதாக மதிமுகவினர்.தி.மு.க கூட்டணியில் இடப்பங்கீடு உரிய முறையில் வழங்கப்படவில்லை' என அதன் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு உதாரணமாக ஒரு உட்கட்சி மோதல் சம்பவம் கரூரில் நடைபெற்றது. மேலும் ம.தி.மு.க முகாமில் திமுக குறித்து வெளிப்படையாகவே அதிருப்தி பேச்சுக்கள் எழுந்துள்ளன. பல மாவட்டங்களில் தி.மு.க, ம.தி.மு.க இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ சந்தித்துப் பேசியுள்ளார்.அனைத்தும் சுமூகமாகத்தான் நடக்கிறது கூட்டணி பேச்சு வார்த்தை பிரச்சனையில்லை என அவர் உதடு கூறினாலும் அவரது உள்ளக்குமுறல் ஊரறிந்தது தான். பல மாவட்டங்களில் கூட்டணிக் கட்சிகளைப் பழிவாங்கும் வேலைகளைத்தான் தி.மு.க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம், கமுதி, முதுகுளத்தூர், கீழக்கரை ஆகிய நகராட்சிகளில் ஓர் இடத்தைக்கூட தி.மு.க ஒதுக்கவில்லை. பரமக்குடியைப் பொறுத்தவரையில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 2 இடங்களில் மதிமுக வென்றது. அங்கு 33 வார்டுகள் உள்ளன. அங்கு ம.தி.மு.கவுக்கு 2 இடமும் சி.பி.எம், சி.பி.எம் கட்சிகளுக்கு தலா 2 இடங்களையும் ஒதுக்கியுள்ளனர். ஆனால், நாங்கள் அங்கு 3 வார்டுகளைக் மதிமுகவினர் கேட்டுள்ளனர்.ராமநாதபுரம் நகராட்சியிலும் 3 வார்டுகளைக் கேட்டுள்ளனர். ஆனால் அவை ஒதுக்கவில்லை. அதே நகராட்சியில் 5 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளனர். பல மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறிய கட்சிகள் யாரும் வேண்டாம்’ என்ற மனநிலையில் தி.மு.கவினர் இருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது’.
இதே நிலைமை தான் ராமேஸ்வரம் நகராட்சிக்கும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அவர்கள் கேட்டது கிடைக்கவில்லை.
கடந்த 31 ஆம் தேதி ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர், 3 வார்டுகளைக் கொடுத்துவிட்டு 2 இடங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டுள்ளார். திமுக தரப்பில் இருந்து ஓர் இடத்தில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்து வெற்றி பெறலாம்' எனக் கூறினர்.
இது சரிவராது. உதயசூரியன் சின்னத்தில் நிற்பதற்குப் பதிலாக எங்களால் தனியாக நிற்க முடியாதா?’ என திமுக மதிமுகவினரிடையே வாக்குவாதம் நடைபெற்று பின்னர் ஒருவழியாக ஒப்பந்தம் கையொப்பமானது. கீழக்கரை நகராட்சியிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு கூறினர். முஸ்லிம் லீக், வி.சி.க ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளிடமும் இதையே தெரிவித்துள்ளனர்.
இது கிட்டத்தட்ட ஜெயலலிதா கையாண்ட யுத்தி தான், ஆனால் மதசார்பற்ற கட்சி என்று நம்பி வரும் சிறிய கூட்டணிகளை சரியான முறையில் அணுக திமுக தலைமை தவறி வருகிறது.அதற்கு காரணம் கூட நேரடியாக தலைமை ஈடுபடாமல் இருப்பது தான் என்கின்றனர் அரசியல் வட்டரதினர்.
- திமுக ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது” – வானதி சீனிவாசன்இன்னும் 4 ஆண்டுகள்நடைபெற உள்ள திமு.க ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது ” , எம்எல்ஏவுமான […]
- கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குசிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவுசீனாவை சேர்ந்த 263 பேர்களுக்கு முறைகேடாக […]
- தி கிரே மேன் ட்ரெய்லர்… கடுப்பான தனுஷ் ரசிகர்கள்…2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக தமிழ் திரையுலகை ஹீரோவாக அறிமுகமானவர் […]
- மதுரையில் ஜூன்.4-5ம்தேதிகளில் துறவியர் மாநாடுமதுரையில் வருகின்ற ஜூன் 4 மற்றும் 5ம் தேதி துறவியர் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு […]
- வெல்கம் பேக் மோடி சொல்லவேண்டிய நிலையில் திமு.க உள்ளது.-பாஜக மாநில செயலாளர் பேட்டிதிமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கோ பேக் மோடி என்று சொன்ன நிலையில், ஆளுங்கட்சியாக வெல்கம் […]
- ஒ.பன்னீர்செல்வத்திற்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்புஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு […]
- இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைதுகழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது […]
- காங்கிரசில் இருந்து விலகிய கபில்சிபில்-சமாஜ்வாதியில் இணைந்தார்காங்கிரஸ் கட்சி கடந்த 2014, 2019 ஆகிய இரு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், […]
- 10ம் வகுப்புபடத்தால்போதும் ஆவின் நிறுவனத்தில் காத்திருக்கும் உடனடி வேலை!மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்டிரீசியன் வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், […]
- படப்பிடிப்பை முடித்து சென்னை வந்தார் நடிகர் விஜய்…நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் புது திரைப்படமானது இப்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. […]
- கண்கள் பளிச்சிட:முதலில் ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்கவும். இதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, […]
- பட்டர் சிக்கன்:தேவையான பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் – 1ஃ2 கிலோ, வெங்காயம் – 4, தக்காளி – 3, […]
- நாளை மறுநாள் பூமிக்கு அருகே வரும் விண்கல் -ஆபத்து ஏற்படுமா?பூமியை நெருங்கும் சுமார் 2 கிமீ அகலமுள்ள மிகப் பெரிய விண்கல் ஆபத்து எற்படுத்துமா என்பது […]
- சிந்தனைத் துளிகள்• ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது. • மன அமைதியில் அடங்கியதே […]
- பொது அறிவு வினா விடைகள்டஜன் என்றால் என்ன?12 பொருட்கள் குரோசு என்றால் என்ன?12 டஜன் (144 பொருட்கள்) ஸ்கோர் என்றால் […]