அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை ஒதுக்கப்போகிறார்கள் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.திமுக அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், அவதூறு பேச்சால் இலக்கா மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவைக்குள் கொண்டு வரும் வேலைகள் வேகமெடுத்துள்ளன.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று இன்னும் சுமார் இரண்டு வாரங்களில் ஓர் ஆண்டு நிறைவடையப் போகிறது. இந்த நிலையில் தான் உதயநிதிக்கு முடி சூட்டிவிடலாம் என கருதி அதற்கான இலக்காவும் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.ஜூன் மாதம் அமைச்சரவை மாற்றம் கட்டாயம் என பல தரப்பிலிருந்தும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. உதயநிதிக்கு எந்த துறை என்பதில் பல்வேறு யூகங்கள் கிளம்பின. பள்ளிக்கல்வித்துறையை ஒதுக்கப்போகிறார்கள் என ஒரு தரப்பும், ஸ்டாலின் ஏற்கெனவே வகித்த உள்ளாட்சித் துறை கொடுக்கப்போகிறார்கள் என ஒரு தரப்பும் பேசி வருகின்றனர்.
உள்ளாட்சித் துறையானது நகர்ப்புற உள்ளாட்சி, ஊரக உள்ளாட்சி என இரண்டாக பிரிக்கப்பட்டு கே.என்.நேரு, கே.ஆர்.பெரிய கருப்பன் ஆகியோரிடம் உள்ளது. இரண்டையும் மீண்டும் ஒன்றாக்கி உதயநிதியிடம் கொடுத்தால் தமிழ்நாடு முழுக்க அவர் சென்று வருவார். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதியை முன்னிறுத்த இது பயன்படும் என்று காரணம் சொல்லப்பட்டது.அதேபோல் பள்ளிக்கல்வித்துறைதான் என்று சொல்பவர்கள் சில காரணங்களை சொல்கிறார்கள். மாணவர்களுக்கான சில திட்டங்களை முன்னெடுத்தால் அடுத்த தலைமுறை வாக்காளர்கள் மனதில் இப்போதே இடம் பிடித்துவிடலாம் என்று கருதுவதாக சொல்லப்பட்டது.
ஆனால் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை உதயநிதிக்கு வழங்க வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 110 விதியின் கீழ் அந்த துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு விளையாட்டுத்துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இதுவும் உதயநிதிக்கு விளையாட்டுத்துறையை ஒதுக்கீடு செய்ய ஒரு காரணமாக கருதப்படுகிறது.
- நலம் விசாரித்த அனைவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றிமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு […]
- புரோட்டா கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்மதுரையில் உள்ள பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மதுரை மாவட்டம் […]
- மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரைக் கண்டித்து..,
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது […] - விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை ” அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்பாரம்பரிய நெல் வகைகளை சந்தைப்படுத்தலில் எனக்கே சவால்கள் உள்ளதாகவும், விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த […]
- அதிமுக தற்போது டெல்லியின் அடமான திமுகவாக உள்ளது -கி.வீரமணிமதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான், அதிமுக அம்மாவின் கொள்கையவே மறந்து […]
- மும்பையிலும் 144 தடை உத்தரவு அமல்..மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியானது. இந்நிலையில் மகாராஷ்டிர […]
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […] - நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் […]
- ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் […]