ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் அஞ்சலி செலுத்தினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி குடும்பத்துடன் இன்று நேரில் வந்து புகைப்படத்திற்கு மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.