பேரறிஞர் அண்ணா அவர்களின் 54-வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட திமுக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலய முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு உதகை நகர செயலாளர் ஜார்ஜ் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தலைமை பொதுக்குழு உறுப்பினர் தொரை, உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், எல்கில் ரவி, காந்தல் ரவி, கர்ணன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர் நாகராஜ், ஜெயராமன், மார்கெட் ரவி, மல்லிகொரை மூர்த்தி, ஜெகதீஸ், தியாகு, தருமன், உதகை நகர துணை செயலாளர்கள் ரீட்டா, கார்டன் கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி தம்பி இஸ்மாயில், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, கஜேந்திரன், மீனா, திவ்யா, வனிதா, மேரி பிளோரீனா, பிரியா வினோதினி, உதகை வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், குண்டன், பெள்ளன், செல்வன், ராமசந்திரன், காளி, கிளை செயலாளர்கள் வெங்கடேஷ், ஸ்டான்லி, பொன்சி, இரும்புகடை குமார், ராஜேஷ் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.