• Thu. May 2nd, 2024

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

Byவிஷா

Oct 17, 2023

தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெகநாதன் வணிகத்துறை ஆணையராகவும், அபூர்வா வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை துறையில் இருந்து வேளாண் துறை செயலாளராகவும் , சமய மூர்த்தி வேளாண் துறை செயலாளர் பதவியில் இருந்து வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் பதவிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல கோபால் நிர்வாக சீர்திருத்தம் துறையில் இருந்து கூட்டுறவு மற்றும் உணவு செயலாளராகவும், ரமேஷ் சந்த் மீனா சிறப்பு முயற்சிகள் துறையில் இருந்து திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் ஷோபனா மேலாண் இயக்குனராக தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சி கழகத்தில் பொறுப்பு வகுத்து வந்த நிலையில், அவர் தற்பொழுது எழுது பொருள் மற்றும் அச்சகம் துறையின் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். கவிதா ராமு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தலைமை நிர்வாக அலுவலர் பொறுப்பில் இருந்து, தமிழ்நாடு கைவினை பொருட்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *