பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை பார்த்து உற்சாகம்.
இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளங்கள் கன்னியாகுமரியும் ஒன்று. தினசரி சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.ஆயிரக்கணக்கானோர் அதிகாலையிலையே காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்-மேலும் தங்களின் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்-அதனை தொடர்ந்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்த நினைவு மண்டபத்திற்கு படகு மூலம் சென்று இயற்கை அழகை ரசித்து பொங்கல் விடுமுறையை கழித்து வருகின்றனர்