நாகர்கோவில் ஹோலி கிறாஸ் மகளிர் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்பண்பாடு சார்ந்த கலை நிகழ்ச்சிகளுடன் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகள், நீதிமன்றங்கள், ஆட்சியர் அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.நாகர்கோவில் ஹோலி கிறாஸ் மகளிர் கல்லூரியில் மாணவிகளின் தமிழ்பண்பாடு சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை மாணவிகள் பேரவை அமைப்பினர் செய்திருந்தனர்.