சூரியனின் முக்கால் பகுதி நீரகத்தால் ஆனது எனவும் எஞ்சிய கால்பகுதி எல்லியத்தால் ஆனது எனவும் கண்டுபிடித்த ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் சர் வில்லியம் அண்டர் மெக்கிரியா நினைவு நாள் இன்று (ஏப்ரல் 25, 1999).
சர் வில்லியம் அண்டர் மெக்கிரியா (Sir William Hunter McCrea) டிசம்பர் 13, 1904ல் டப்லினில் பிறந்தார். இவரது குடும்பம் 1905ல் கெண்ட் நகருக்குச் சென்றது. பிறகு டெர்பிசயருக்குச் சென்றது. இவர் அங்கு செசுட்டர்பீல்டு இலக்கணப் பள்ளியில் சேர்ந்தார். இவரது தந்தையார் டெர்பிசயரின் சுடாவ்லியில் உள்ள நெதெர்தோர்ப் இலக்கணப் பள்ளியின் ஆசிரியர் ஆவார். 1923ல் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்து பயின்றார். இங்கு கணிதவியல் கற்றார். 1929ல் இரால்ப் எச். பவுலரின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார். இவர் பின்னர் 1929ல் எடின்பர்கு பல்கலைக்கழகத்தின் கணிதவியல் விரிவுரையாளர் ஆனார். இலண்டன் இம்பீரியல் கல்லூரியிலும் உயர்விரிவுரையாளராகவும் உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 1936ல் பெல்பாசுட்டு அரசி பல்கலைக்கழகத்தில் கணிதவியல் துறையின் தலைவரானார்.
போரில் பணியாற்றிய பிறகு, 1944ல் அரசு ஆல்லோவே கல்லூரியில் கணிதவியல் துறையில் சேர்ந்தார். 1965ல் சூசெக்சு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைசார்ந்த வானியல் மையத்தை உருவாக்கினார். 1928ல் ஆல்பிரெக்ட் அன்சோல்டுவின் கருதுகோளைப் படித்துவிட்டு சூரியனின் முக்கால் பகுதி நீரகத்தால் ஆனது எனவும், எஞ்சிய கால்பகுதி எல்லியத்தால் ஆனது எனவும், 1% மட்டும் பிற தனிமங்களால் ஆனது எனவும் கண்டுபிடித்தார். இதற்கு முன்பு அனைவரும் சூரியன் இரும்பாலானது என நம்பியிருந்தனர். இதற்குப் பின்னர், அனைத்து விண்மீன்களிலும் நீரகம் உள்ளதை உணரலாயினர்.
மெக்கிரியா 1964ல் விண்மீன்களின் நீலத் தோற்றத்துக்கு உரிய விளக்கமாக பொருண்மை பரிமாற்ற இயங்குமுறையை முன்மொழிந்தார். 1961 முதல் 1963 வரை அரசு வானியல் கழகத்தின் தலைவராக இருந்தார். இவர் 1965 முதல் 1966 வரை பிரித்தானிய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் ஏ பிரிவுக்குத் தலைவராக விளங்கினார். 1985ல் வீரர் பட்டம் பெற்றார். 1976ல் அரசு வானியல் கழகப் பொற்பதக்கத்தைப் பெற்றார். சர் வில்லியம் அண்டர் மெக்கிரியா ஏப்ரல் 25, 1999ல் தனது 94வது அகவையில் இலெவெசுவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அரசு ஆல்லோவே வளாக மெக்கிரியா கட்டிடம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]
- 2 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி […]
- மாரடைப்பால் உயிரிழந்த போதும் பயணிகள் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்அருப்புக்கோட்டை அருகே, அரசு பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு…வண்டியை சாலையோரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.மதுரை, […]
- மதுரையில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது […]