• Thu. May 2nd, 2024

சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட, தேமுதிக சிவகங்கை மாவட்ட செயலாளர் விருப்பமனுவை பிரேமலதா விஜயகாந்திடம் தாக்கல் செய்தார்

ByG.Suresh

Mar 20, 2024

பாராளுமன்ற தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு தேமுதிக சார்பில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக சிவகங்கை மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தனது விருப்பம் மனுவை தலைமை கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் வழங்கினார். அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை கழகத்தில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது விருப்பமனுவை சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஞானமுத்து, தலைமை கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் வழங்கினார் . இவர்களுடன் சிவகங்கை நகர் அவை தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட பல்வேறு கழக உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *