அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் இன்று உண்டியல்எண்ணும் பணி நடைபெறுகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பரமணிய சுவாமி கோயில், முருக பெருமானின், ஆறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருக பெருமானை தரிசித்து செல்வார்கள். பக்தர்கள் நேர்த்திக் கடனாக காணிக்கை மற்றும் வெள்ளி, தங்கம் முதலானற்றை வழங்குவர். இவ்வாறு பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் மாதம் ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது.