சென்னையில் நேற்று திடீரென கன மழை பெய்தநிலையில், மின்சாரம் தாக்கியதில் சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
மயிலாப்பூரில் சாலையில் தேங்கியிருந்த நீரில் மின்சாரம் கசிந்ததால் 13 வயது சிறுவன் இலட்சுமணன் உயிரிழந்தார்.
புளியந்தோப்பு பகுதியில், இரண்டாவது மாடியில் குடியிருந்த பெண் மீனா, கடைக்குச் செல்வதற்காக மழைநீரில் நடந்துசென்ற போது மின்சாரம் தாக்கியதில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
ஓட்டேரி பகுதியில் சாலையில் நடந்துசென்ற மூதாட்டி ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்துபோனார்.
வானிலை முன்னறிவிப்பில் கணிக்கப்படாதபடி சென்னையில் நேற்று இந்தத் திடீர் மழை பெய்யத் தொடங்கியது. முற்பகல் முதல் வானிலை சட்டென மாறத் தொடங்கி மேகமூட்டம் போட்டு வானம் இருண்டது.மதியம் தொடங்கிய மழை, படிப்படியாக வலுத்து இரவு 7 மணி வரை நீடித்தது. இதனால் நகர் முழுவதும் வெள்ளம்பெருக்கெடுத்தது.மாலையில் வேலையிடங்களிலிருந்து வீடுதிரும்பும் நேரத்தில் மழை பெய்துகொண்டே இருந்தது
சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், பெரும்பாலான இடங்களில் பேருந்துகளே வரவில்லை. மேலும், வெள்ளநீர் சாலையை அடைத்தபடி நின்றதால், வாகனங்களும் பேருந்துகளும் ஊர்ந்துசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
எழும்பூர் கெங்கு சுரங்கப்பாதை, தியாகராயர் நகர் மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, துறைமுகம் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஆகியன நீர் தேங்கியதால் மூடப்பட்டன. இதனால் அந்த வழித்தடங்களில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, நிலப்பகுதியை நோக்கி நகர்ந்ததே, நேற்றைய சென்னை திடீர் மழைக்கு காரணம் என்று வானிலை மையம் தெரிவித்தது.நேற்று முற்பகல் 11.45 மணிக்கு வெளியிடப்பட்ட அன்றாட முன்னறிவிப்பில், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருந்தது. ஆனால், சென்னையில் இலேசான, மிதமான மழை பெய்யும் எனக் கூறப்பட்டிருந்தது.ஆனால், திடீர் மழை பெய்து சில மணி நேரங்களில் ஒட்டுமொத்த நகரையே பெரும் அவதிக்கு உள்ளாக்கிவிட்டது.அண்ணாசாலை, பூந்தமல்லி சாலை, நூறடி சாலை, ஜிஎஸ்டி சாலை, ஜிஎண்டி சாலை ஆகியவற்றில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
அவரச ஊர்திகளும் இந்த நெரிசலில் சிக்கிக்கொண்டதை பல இடங்களில் பார்க்கமுடிந்தது.
நேற்று இரவு 7.45 மணி நிலவரப்படி,சென்னையில் அதிகபட்சமாக எம்.ஆர்.சி. நகர் வட்டாரத்தில் 19.8 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 15.9 செமீ, நந்தனம் பகுதியில் 15.2 செமீ, அண்ணா பல்கலைக்கழகம் பகுதியில் 12.1 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் 10.85 செமீ, மீனம்பாக்கத்தில் 10.8 செ.மீ. என மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]
- சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம்மதுரை மாவட்டவாடிப்பட்டியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்ட சட்ட […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அன்னதானம் வழங்கி வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஏழாம் நாள் மண்டகப்படி விஸ்வகர்மா […]
- 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன் -சரத்குமார் பேச்சுஇன்னும் 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன் என சமக பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் […]
- ஓபிஎஸ் -சசிகலா ஜூன் 7ல் சந்திப்பு?தஞ்சாவூரில் வரும், 7ம் தேதி நடக்கும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழாவில், பன்னீர்செல்வமும், […]
- ஜி.எஸ்.எல்.வி.எப்-12′ ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்ததுதரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக ஏவப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.இந்த […]
- சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் ஆளுநர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் கல்வி இன்டர்நேஷனல் பொதுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் […]
- பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரின் சுயசரிதை நூல் வெளியீடுபி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையை புத்தகமாக எழுதி […]
- மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் செயின் பறித்த கொள்ளையன் சிக்கினான்மதுரை சோழவந்தான் அருகே துணிகரம் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் தங்க […]
- திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துதிடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்து விருதுநகர் அருகே […]
- மதுரை அருகே விபத்தை தவிர்க்க கடைக்குள் புகுந்த கார்மதுரை பசுமலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் விபத்தை தவிர்க்க கார் அருகில் […]